Friday, December 17, 2010

நானே நானா....யாரோதானா....

நம்மைத் திருத்திக் கொள்ள உதவும் தவறுகளை எப்படித் தவறென்று சொல்வது? சரியென்று சொல்வதே மிகச்சரி...!

Tuesday, December 14, 2010

Saturday, December 11, 2010

பென்சில் பெண் ஜில்-ஓவியம்

      கவிஞர் மகுடேஸ்வரன் எழுதிய ’காமக்கடும்புனல்’ புத்தக முகப்பு அட்டை ஓவியம் இது(மூல ஓவியம்:பட்லேகர்). பார்த்ததும் கண்களில் ஒட்டிக் கொண்டது. பென்சிலில் வரைய முடிவெடுத்து முடித்தேன். குறைகளிருப்பினும் அடுத்த படங்களில் திருத்திக் கொள்கிறேன்.புத்தகம் தந்தருளிய காலப்பயணிக்கு நன்றி.

Friday, November 19, 2010

பாடல் தேடிய கதை(கண்டிப்பாக இளையராஜா ரசிகர்களுக்கு மட்டும்)

*ஜீவா ஹோவாகிதே*
             பெங்களூரு வால்வோக்களில் பயணிக்கையில், உள்ளூர்ப் பண்பலைகளில் ஒலிபரப்பாகும் பாடல்களைக் கேட்க நேர்ந்ததுண்டு. முக்கால்வாசி ஹிந்திப் பாடல்களும், கால்வாசி கன்னடப்பாடல்களும் வரும். கன்னடப்பாடல்கள் அனைத்தும், தென்னிந்திய மொழிகளுக்குண்டான ஃப்ளேவருடனும், கரோக்கியாக மாற்றிக் கேட்டால் எல்லாம் ஒன்றே போலவும் தோன்றும்.(விஜயாண்டஹாரிஸ்தேவவித்யாயுவரகுமான்கள் இசை) போல் ஒரே டெம்ப்ளேட்டில் இருக்கும்.அதனால் கண்களை அகல விரித்துக் கொண்டும், காதுகளை இறுக்க மூடிக்கொண்டும் இருந்துவிடுவேன். ஓரிரு நாட்களுக்கு முன் ஏறிய ஒரு பேருந்தில் கேட்ட பாடல்தான் இப்பாடல்.சரணத்திற்கு அடுத்துவரும் பல்லவியைக் கேட்டவுடன் புரிந்துவிட்டது இது ராஜாவின் பாடல் என்றும், பாடிக்கொண்டிருப்பவர் கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமார் என்றும். ராஜ்குமாரின் குரலைக் கேட்கையில் இளகிய P.B.ஸ்ரீநிவாஸின் குரல் போலவே எனக்குப் படும்.





            மொழி தெரியாததால், வரிகளைக் கவனிக்க முடியவில்லை, ‘ஜீவ’ என்ற முதல் வார்த்தை மட்டுமே தெரிந்தது. கன்னட நண்பர்களிடம் கேட்டுப் பார்த்தேன். பாடிக் காட்டச் சொன்னார்கள்.காட்டினேன். ஏனோ அதன் பிறகு பேச்சையே குறைத்துக் கொண்டார்கள்.காதுல ஏதோ பிரச்சினை போலும் அவர்களுக்கு. வீட்டிற்கு வந்து யூ ட்யூபில் தேடிப் பார்த்தேன். “ஜீவ+ராஜ்குமார்+கன்னடா” இவையே எனது தேடலுக்கான வார்த்தைகள். கிடைத்துவிட்டது. பாடல் அந்ந்ந்ந்ந்ந்ந்ந்தக் காலத்து மரம்சுற்றும் டூயட்தான். இடையிடையே ‘ஜானி’ படத்தில் ரஜினி+ஸ்ரீதேவி ஓடிவது போல் ஸ்ல்ல்ல்ல்லோமோஷனில் ஓடுகிறார்கள்.ஹீரோயினை விட வயது அதிகம் எனினும் ராஜ்குமார் இளமையாகத் தோன்றுகிறார். இந்தப் பொல்லாப்பெல்லாம் வேண்டாம் என்பவர்கள், பாடலை ஓடவிட்டு, பிரவுசரின் பக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள். செவிகள் மட்டும் கேட்டுக் கொள்ளட்டும். 80களில் வந்த ராஜ இசைதான். தமிழ்ப் பாடல் கேட்பது போல்தான் இருக்கிறது. ஆனாலும் ராஜ்குமாரின் குரலில் இன்னும் கொஞ்சம் மெருகேறி ஒலிக்கிறது பாடல். எனக்கென்னமோ இந்தப் பாடலும் என் ப்ளேலிஸ்ட்டில் சீக்கிரம் ஒட்டிக் கொள்ளுமெனத் தெரிகிறது.

   பி.கு: ரவிசார் அறியாத ஒரு பாடலைப் போட்டுவிட்டேன் என்ற திருப்தி :)

Tuesday, November 16, 2010

இரவு-தொலைந்ததும், கிடைத்ததும்

    இத்தனை நாட்களாய் ட்விட்டர், ஃபேஸ்புக், பஸ்ஸில் எழுதிய டிவீட்டுகள். என்னைப் பொறுத்தவரை கசப்பான ஸ்வீட்டுகள். இரவில் எழுதிய இரவைப் பற்றி எழுதிய அனைத்தையும் தொகுத்திருக்கிறேன்.மற்றபடி உங்கள் விருப்பம். 

இரவின் கால்களில் இருக்கும் எண்ணற்ற நகங்களின் உராய்தல் முதலில் சுகத்தையும் முடிவில் ஆறா ரணத்தையும் தருகிறது #இரவின் பிடியில்


**************************************************************************


இரவின் எல்லை தெரிந்தாலும் கை நீட்ட நீட்ட இன்னும் தூரமாவர்தேன்? #இரவும் நானும்


***************************************************************************


ஊர் உறங்கும் வேளையில் விடியலைச் செய்து கொண்டிருந்தது இருள். #இருளின் ரகசியம்


***************************************************************************


எவ்வளவுதான் விழிப்பாய் இருந்தாலும் நித்திரை தொலையும் இரவுகளை மட்டும் முன்பே கண்டுகொள்ள முடிவதில்லை#இரவின் பிடியில்


***************************************************************************


என்னை விழுங்கும் இரவா, கண்ணை விழுங்கும் உறக்கமா?இப்போதைக்குப் பறிகொடுக்கிறேன் எதையாவது#இரவின் பிடியில்


***************************************************************************


மாலைகளின் ரம்மியத்தைக் கவர்ந்து கொள்வதற்கே கருப்பு அங்கியுடன் பதுங்கி நிற்கிறது இரவு # மாலை மயக்கம்


****************************************************************************


ஒவ்வொரு நாளின் முடிவிலும் சேகரமாகும் வெறுமைகளின் நிறம் இருளை விடவும் கருமையானது#இரவின் பிடியில்


****************************************************************************


இரவிடம் ஏதோ சொல்வதற்காக, வெளியே நாய் குரைத்துக் கொண்டிருக்கிறது.உள்ளே நான் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.#இரவும், நானும்


****************************************************************************


நிலவு தின்ற இரவின் பசி மலைப்பாம்புடையதைப் போலடங்கினால் நான் தப்பித்துக் கொள்வேன்# இரவின் பிடியில்


****************************************************************************


ஊடலில் முகம் திருப்பிக் கூந்தல் காட்டும் இன்றைய நிலவும் அழகுதான்#இரவும், நிலவும் #அமாவாசை


****************************************************************************


சாமியாடுபவரைக் கண்டு அம்மாபின் ஒளியும் குழந்தையாய்ப் போர்த்திக் கொள்கிறேன்.ஆடட்டும் இரவு #இரவின் பிடியில்


****************************************************************************


இரவுகளை வித்தியாசப் படுத்துவது அளவில் கூடும் கவலைகள் மட்டுமே #இரவின் பிடியில்


****************************************************************************


சிதறிக் கிடக்கும் கரு வண்ணத்தில் என் தூக்கத்தையும் சேர்த்துக் குழைக்கிறேன்.இன்னும் இருளட்டும் இரவு #இனிய இரவு


****************************************************************************


இரவின் ரகசியக் கண்ணிகளுக்குள் என் தூக்கமும் சிக்கிக் கொள்ளட்டும். #இனிய இரவு


****************************************************************************


இரவுகள் ஆடும் பரமபதத்தில் இன்றாவது பாம்புகள் கொத்தாமலிருக்கட்டும் என்னை...#புலம்பல்கள்


*****************************************************************************
  

Thursday, October 28, 2010

நனைந்தது அருவி...

முதன்முதலாய் 
நகரம் வந்த சிறுமி
பூங்கா சென்றாள்
செயற்கை நீரூற்றில்
தலை நனைந்தவள் 
செல்லச் சிணுங்கலுடன்
பெயரிட்டாள்
குட்டி அருவியென்று
பெயரில் நனைந்தது 
புதிய அருவி

டிஸ்கி: நன்றி: கார்த்திகைப் பாண்டியன் (பஸ்ஸில் கவிதையாக மாற்ற உதவியதற்கு)

Monday, October 25, 2010

சென்னையில் ஒரு நட்பு மழைக்காலம்...

        னிக்கிழமை காலையில் நான் இறங்கிய இடம் கீழ்ப்பாக்கம். போக வேண்டியது டி.நகர். அங்குதான் அருணா ஹோட்டலில் ரூம் சொல்லி இருப்பதாகச் சொல்லி இருந்தான் நண்பனும், ஞாயிறன்று நடக்கவிருந்த திருமண வரவேற்பின் நாயகனுமான அவன். ‘டி. நகர்ல போய் அருணா ஹோட்டல் எங்க இருக்கும்னு கேட்டா, குழந்தைகூட வழி சொல்லும்’ எனச் சொல்லியிருந்தான். வந்திறங்கிய நேரத்தில் குழந்தைகள் எதுவும் சிக்காததால், ஆட்டோக் காரர்களை நாடினேன்.70 ரூபாய்க்குப் பேரம் படிந்ததில் அருணா ஹோட்டல் வந்து சேர்ந்து, ரிஷப்சனில் இருப்பவரிடம், ‘கதிரவன் சொன்னாராமே, ரூம் சொல்லியிருக்குன்னு’. ‘இல்லை’ என்ற பதிலில் அதிகம் ஏமாற்றமடையாமல் அருகிலேயே ‘ஊர்வசி இண்டர்நேஷனில்’ ஒரு அறை எடுத்தேன்.பாண்டிபஜாரில் ராஜா பகதூர் ஸ்ட்ரீட்டில் இருந்தது ஹோட்டல்.அப்படியொன்றும் இண்டர்நேஷனல் லுக் தெரியவில்லை. பழைய ஏசியானது, அதன் முன்புற ப்ளேடுகள் இருந்த பகுதி முழுவதும் உடைக்கப்பட்டு சதுரக் குகைதான் தெரிந்தது.தேவைப்பட்டா உள்ள தண்ணி வச்சுட்டு ‘ஐஸ்வாட்டரா’ எடுத்துக்கலாம் போல.வெளியில் தெரிந்த வெக்கைக்கு இது தேவலாம். ஒரு தூக்கத்தில் முற்பகலைக் கழித்திருந்த வேளையில் மகேஷிடமிருந்து அழைப்பு. ஒரு மணிக்கு நுங்கம்பாக்கம் ஹைரோடில் பிட்சா கார்னரில் சந்திப்பு. பதிவுலகத் தளபதி கார்க்கியும் தனது காலண்டரில் கோடு கிறுக்கியிருந்த சனிக்கிழமையின் இறுக்கத்தை எனக்காகத் தளர்த்தி விட்டு வருவதாகச் சொல்லி இருந்தார்.


     டல் முழுவதும் ஒரு வித உப்புத்தனமான வியர்வை கண்ணுக்குத் தெரியாமல் படிந்திருக்க, நசநசப்போடு ’பிட்சா கார்னரில்’ படியிறங்கினேன்.(பேஸ்மெண்ட்லதான் இருக்கு. அதான்). சனிக்கிழமை முற்பகலில் அதிகம் காதலர்கள் கூட்டம் இருக்கும் என்ற நியதியைத் தொலைத்துவிட்டிருந்தது பிட்சா கார்னர். மொத்தம் 6 பேர்தான். முன்று சோடி. மூன்றில் ஒரு சோடி கார்க்கி-மகேஷ். தொப்பியில்லாமல் இருந்த கார்க்கி பஞ்ச் டயலாக் இல்லாத விஜய் படம் போல இருந்தார். என் முகமாற்ற்த்தைக் கண்டு தொப்பி சூடிக் கொண்டார்.பின்னணியில் வெகு சோபையாக ஹிந்திப் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன.என் வாழ்க்கையில் முதல்தடவையாக பிட்சா கார்னர் சென்றதால் குச்சுக்குள் இருக்கும் குமரிப் பெண்ணாய் உட்கார்ந்திருந்தேன். இருவரும் ஏதேதோ என் காதுக்குள் நுழையாத பெய்ர்களாக ஆர்டர் பண்ணினர்.
நம்மூர் வர்க்கி ரொட்டி போல் ஏதோவொரு வஸ்து வந்திருந்தது. டீயில் முக்கித் தின்றால் நன்றாக இருக்குமென எண்ணி அவ்வெண்ணத்தை மனதிற்குள்ளேயே அடக்கினேன். மகேஷ் அவனது கேமராவை எடுத்து வந்திருந்தான். அதனால் பேச்சு ஃபோட்டோ எடுப்பதில் ஆரம்பித்து, பதிவு, ட்விட்டர், மொக்கை, தோழி அப்டேட்ஸ் எனப் பல்வேறு திசைகளில் பயணித்தது. மகேஷ் ‘கூல் கேட்’ போல அதிகம் பேசாமல் இருந்தான். மகேஷைக் கூட முன்பிரு முறை பார்த்திருக்கிறேன். கார்க்கிதான் சிக்க்வேயில்லை. ஃபோனில் பேசுவதோடு சரி. சென்ற வாரம் பெங்களூர் வந்த போதுகூட அவரது கால்ஷீட் ஃபுல். பார்க்க முடியவில்லை.நேரில் கார்க்கி வழக்கம்போல சரவெடிதான். ட்விட்டரில் பேசுவதுமாதிரியேதான் பேசிக்கொண்டிருந்தோம்.புதிதாகப் பழகிய உணர்வே இல்லை. திடீரென பத்து பெண்கள் கறுப்பு அங்கிக்குள் பிட்சா கார்னருக்குள் வந்தனர். கலகல பேச்சும், பாட்டுமாய்க் களித்தனர். ஓரமாக அவர்களையும் ரசித்துக் கொண்டோம்.விதவிதமான பீட்சாக்கள் வந்திருந்தன. உண்டதில் அவை அனைத்துமே எனக்கு ப்ரெட் ஆம்லேட் போல்த்தான் தோன்றியது.ஒன்றரை மணி நேரங்கள் இனிப்பாகக் கழிந்திருந்தன. வெளியே வந்து மகேஷின் கேமராவுக்குத் தீனி போட ஆரம்பித்தோம். இயல்பாக இருங்கள் எனச் சொல்லிச் சொல்லி எங்களின் இயல்பைத் தொலைத்த கணங்களைப் படமாக்கிப் பத்திரப் படுத்திக் கொண்டான். அடுத்த நாள் காலை யோக நிலையில் சந்திக்கத் திட்டம். இன்றே வருவதாகச் சொல்லியிருந்து கடைசி நேரத்தில் கல்லூரியில் கடலை போடச் சென்ற வானவில்வீதியாரையும் அடுத்த சந்திப்பில் சந்திப்பதாக முடிவெடுத்துப் பிரிந்தோம்.

     ட்டோவில் ஏறி ‘அருணா ஹோட்டல்’(ஊர்வசி இண்டர்நேஷனல் கண்டிப்பாக இவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பது என் திட எண்ணம்) விடப்பா என்றேன். டி நகர் சரவணா ஸ்டோர்ஸ் முன்பு தீபாவளி ஷாப்பிங்கில் இருந்த மக்கள் நெரிசலைக் கடந்து, ச்வுத் உஸ்மான் ரோட்டிலிருக்கும் ‘அருணா ஹோட்டல்’ முன்பு வந்து நின்றபோது ‘ஙே’ வென விழித்தேன். இது வேறு அருணா என்பதும், எனது நண்பன் அறைக்குச் சொல்லியிருந்ததும் இதுவேயென ‘ஒன்றும் ஒன்றும் இரண்டுமாக’க் கணக்குப் போட்டுப் புரிந்து கொண்டேன். முன்னரே ரவிஷங்கர் சாரிடமும், கோபிநாத்திடமும் பேசி இருந்தேன். அருணா ஹோட்டலில் சனி மாலை ஏகபோக இசைச் சந்திப்பு நடத்தலாமென. தவறாக வந்ததில் ஒரு நன்மை. சந்திப்பு நடக்கவிருந்த இடமாவது அறிந்துகொண்டோம் என்ற திருப்தியில் எனது ஹோட்டல் சென்றேன்.உண்ட மயக்கம் உசுப்பேற்ற, கையெட்டாத தூரத்தில் மொபைலுக்குச் சிறிது மின்சாரச் சோறளித்தவாறே தூங்கினேன்.


    ப்போது கண்விழித்தேன் எனத் தெரியவில்லை. நேரம் 5.30. அடடா... 5 மணிக்கு அவர்களைச சந்திப்பதாக ஏற்பாடானதே. எனப் பதற்றத்தோடு மொபைலை அணுகினால், அது 17 மிஸ்டு கால்களைத் தரிசனம் காட்டி என் படபடப்பை அதிகப் படுத்தியது. ரவிஷங்கர், கோபி இருவருக்கும் ஃபோன் செய்தேன். இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்ததில்லை. அருணா ஹோட்டல் அருகில் இருப்பதாகக் கூறினர். அவசர மன்னிப்புக்களை அள்ளிவிட்டுக் கொண்டே கிளம்பினேன். இருபது நிமிடங்களில் டி நகர் ட்ராஃபிக்கைக் கடந்து அருணா ஹோட்டல் வந்தால் , ரவி ஷங்கர் சார் வந்து விட்டிருந்தார். சரி கோபியை அழைக்கலாம் என அழைத்தால் ‘பச்சை டி ஷர்ட்டில்’ அருணா ஹோட்டலின் முன்பு இருப்பதாகச் சொன்னார். நாங்களும் அருணா ஹோட்டல் முன்புதான் இருக்கிறோம். எனது மரமண்டைக்குச் சற்றுத் தாமதமாக உரைத்தது. பின் தெளிவாகக் கேட்டேன் எந்த அருணா என்று. கூலாகச் சொன்னார் கோபி பாண்டிபஜார் அருணா என. அடப்பாவி அங்க இருந்து இப்பத்தான் இங்க வந்தேன். மறுபடியும் முதல்லேருந்தா எனப்புலம்பியவாறே. கோபியை இங்கு அழைத்தேன். நல்ல வேளை கோபி மனதிற்குள் என்னைத் திட்டியது என் மொபைலில் கேட்கவில்லை. டெக்னாலஜி வாழ்க.

   
       ந்தா இந்தாவெனப் போக்குக்காட்டிய சந்திப்பு ஆறேகால் மணிக்கு டி நகர் அருணா ஹோட்டலில் இடது புற பாரில் துவங்கியது. ‘என்ன சார் இவ்ளோ நாய்ஸ்?’ என்றேன் ரவிசாரிடம். இது ஒரு ஹை ப்ரொஃபைல் டாஸ்மாக்தான் என்றார். இங்கு சிறப்பே சைட் டிஷ்தான் எனக் கொசுறையும் உதிர்த்தார். ரவி சாரை இதற்கு முன் பார்த்தது இரு வருடங்களுக்கு முன்பு. அப்போது கோடம்பாக்கத்திலுள்ள துளசி பார்க்கில் உரையாடினோம்.சற்று மெலிந்திருந்தாற் போல் தோன்றியது. முன் கோபி போல் அவரது எழுத்தில் தான் சிறிது கடினம் இருக்கும். நேரில் தோளில் கை போட்டுப் பேசும் தோழனின் அருகாமைதான் வரும். இளையராஜாவைப் பற்றிச் சுற்றியே சுழலும் பேச்சுக்கள். நான் முதலில் சாரைச் சந்தித்தபோதே அவர் என்னை முதன்முதலில் அழைத்துச் சென்ற இடம் இளையராஜா வீடுதான்.(உள்ளே எல்லாம் போகவில்லை). கோபி இதுவரை பார்த்ததில்லை.ச்சாட்டிலும், ஃபோனிலும்தான் பேச்சு. சற்றுத் துறுதுறுவென அக்மார்க் சென்னைக்காரனாய் வந்திருந்தார். பேச்சிலும் சென்னை அப்படியே.


       வரவர் விருப்ப பானங்களை ஆர்டர் செய்துவிட்டுப் பேச்சை ஆரம்பித்திருந்தோம். முதலில் பேச்சு ரவிசாரின் முந்தைய நாள் பதிவைப் பற்றித்தான் இருந்தது. ராஜா பாடல்களின் ஆரம்பகட்ட ‘ஒலிப்பதிவுத் தரம்’ பற்றிக் குறைப்பட்டுக் கொண்டோம். பின் ஒவ்வொரு பாடலின், இடைஇசையைப் பற்றியும், ராஜாவுக்கு முந்தைய இசையமைப்பாளர்கள் பற்றியும் தொடர்ந்தோம். இடையில் கோபி ‘ரசவடை’ வராதது பற்றி சர்வரிடம் குறைபட்டுக் கொண்டார்.எனக்கும் ஏமாற்றமே. முழுக்க முழுக்கப் பேச்சு இளையராஜா பற்றியே இருந்தது. ஆனால் ஒரு தெளிவில்லாமல் போய்விட்டது. அங்குமிங்குமாக அலைபாய்ந்து கொண்டிரு்ந்தது. அடுத்த சந்திப்பில் திட்டவட்டமான அஜண்டாவோடுதான் ரவி சாரைப் பார்க்க முடிவெடுத்துக் கொண்டேன். மூன்றரை மணி நேரங்கள் ஓடியதே தெரியவில்லை.விடைபெற்றுக் கொள்ளும் நேரம் வந்திரு்ந்தது. ரவி சார் நான் படிப்பதற்காக ஒரு பை நிறையப் புத்தகங்கள் கொடுத்து வழியனுப்பி வைத்தார்.
வீடு வந்துதான் பார்த்தேன்.சுநதர ராமசாமி,ஆதவன்,மாலன்,கனிமொழி இன்னும் சில புத்தகங்களாக நிரம்பியிருந்தன. அடுத்த வார தீபாவளி லீவில் படித்துவிட வேண்டும். சுந்தரராமசாமி படிக்க நினைத்திருந்தேன்.கேட்காமலேயே கையில் கொடுத்த ரவிஷங்கருக்கு நன்றிகள்.


    ஞாயிறன்று காலை மறுபடியும் மகேஷ், கார்க்கியை, கார்த்தியுடன் சந்திப்பதாக இருந்தது.ஆனால் மறுபடியும் கார்த்தி வரமுடியவில்லை. பதினொரு மணிக்குத் திட்டமிட்டிரு்ந்த சந்திப்பு ஒரு மணிக்குத்தான் அரங்கேறியது. சந்தித்த களம் கோடம்பாக்கம் துளசி பார்க். பேருதான் பார்க். ஆனா நாங்க போன இடத்துக்கு, ஹோட்டல் பேர்ல கடைசி எழுத்து தேவையில்லாத ஒன்று :-) கார்க்கி அவரின் நண்பர் வினோத்துடன் வந்திருந்தார்.ஆள் பார்க்க கொஞ்சம் ஹீரோ போலவும், கொஞ்சம் வில்லன் போலவும் தெரிந்தார்.கார்க்கி பாருக்குக் கூட்டி வருவதால் ஒருவேளை இவர்தான் ஏழுவோ எனவும் நினைத்துத் தொலைத்திருந்தேன்.ஆனால் அவர் அப்படியில்லை எனப் பின் உணர்ந்தேன். நான் கேட்ட சரக்குகள் சென்னையில் இல்லை. :-( தமிழக அரசு ‘குடி’ மக்களின் நலம் பேணாத அரசு எனக் கேள்விப்பட்டதை அன்றுதான் உணர்ந்தேன்.மருந்துக் கடைகளில் போனால் நாம் கேட்ட மருந்து இல்லாமல் போனால் ‘இல்லைங்க அதே மருந்து இன்னொரு கம்பெனி பேர்ல இருக்கு. வாங்கிக்குங்க’ன்னு சொல்வார்களே. அது போல நான் கேட்டதற்கு ஈக்வலண்டான ஒரு சரக்கு வாங்கிக் கொண்டேன்.இன்றைய பேச்சு முழுவதும் சினிமா, கிரிக்கெட் எனச் சுற்றியது. பத்து நிமிடம் மகேஷ் பேசவே இல்லை. என்னடாவென்று பார்த்தால் ‘சன் மியூசிக்கில்’ வந்த எமி ஜாக்சனுடன் கனவு டூயட் பாடிக் கொண்டிருந்தான்.மூன்று மணிக்கெல்லாம் கலைந்து விட்டோம்.

    வானவில்வீதி கார்த்திக்கிடம் தனியாக மாலை டி நகரில் சந்திக்கலாம் எனச் சொல்லியிருந்தேன். 6 மணிக்கு மொபைலில் கூப்பிட்டான். தூக்கத்தில் எடுக்க வில்லை. அதற்குள் நான் செல்ல வேண்டிய திருமண வரவேற்புக்குச் சென்றுவிட்டேன். மறுபடி அவனை அழைத்தால் ‘மொபைல்’ ஆஃப் ஆகியுள்ளது. கார்த்திக்கிடம் ஒரு பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இதற்காகவெல்லாம் கார்த்தி கோபித்துக் கொண்டு பதிவுலக நாட்டாமைகளிடம் ப்ராது கொடுக்க் மாட்டான் என நம்புகிறேன்.


டிஸ்கி: சென்னை வெயிலும் வெக்கையும்தான் தாங்கமுடியவில்லை. மற்றபடி வெகுவாக ஆனந்தித்திருந்தேன். :) சந்திப்பை வெற்றிகரமாக நடத்த உதவிய நண்பர்களுக்கு நன்றிகள். திட்டங்களில் என்னால் ஏற்பட்ட குழறுபடிகளைப் பொறுத்தருளியத்ற்கும் நன்றிகள்...

Sunday, October 10, 2010

தேவதை கண்டவள்


தூங்கி எழுந்தவள் கேட்டாள்
அப்பா தேவதைக்கு
கால் இருக்குமா
இல்லை என்றேன்
இறக்கை,தங்கமுடி,
சின்னக் க்ரீடம்
இன்னபிறவும் இருக்குமா கேட்டாள்
ஆம் என்றேன்
கனவுல வந்த தேவதை
கண்ணாடியும் போட்டிருந்துச்சுப்பா
என்றாள்...
சிரித்துக் கொண்டே சரிசெய்தேன்
என் மூக்குக் கண்ணாடியை...

   நன்றி: மாடல்: திவ்யா...
புகைப்பட உதவி:மகேஷ்...

Thursday, October 7, 2010

கிணற்றுத் தவளை

கும்மிருளாய்க் கருநீர்
வழுவழுப்புக் கற்கள்
பாசியோடிய படிகள்
துருவேறிய வாளிகள்
உடைந்த பால்பாட்டில்
பிளாஸ்டிக் மிச்சங்கள்
இங்கென்ன இருக்கிறது வாழ
மழைநாள் மயக்கத்தில்
சொன்னது மூத்த தவளை
குறுக்குவெட்டோடு
குத்திய கண்களோடு
செத்திருந்தது
ஆய்வகத் தவளை

Sunday, October 3, 2010

அவளுக்கும் அழகென்று பேர்

அவள் சிரித்தாள் அழகு காட்ட
அவள் சிணுங்கினாள் அழகு காட்ட
அவள் தலை கோதினாள் அழகு காட்ட
அவள் உதடு சுழித்தாள் அழகுகாட்ட
அவள் தலையைத் தட்டினாள் அழகுகாட்ட
அவள் தாவணி சரிசெய்தாள் அழகுகாட்ட
அவள் ‘போடா’ என்றாள் அழகுகாட்ட
அவள் நகம் கடித்தாள்
நாசூக்காய் கோபித்தாள்
பாடல் ரசித்தாள்
பல்லவி பாடினாள்
பள்ளிக்கதை சொன்னாள்
பாதிக்கதை நிறுத்தினாள்
அழகுகாட்ட....

அயர்ந்து தூங்கினாள்
தானாய்க் கூடியது அழகு....

Saturday, October 2, 2010

பொழுதுபோக்கு

விடுமுறைக் காலையில்
டியூஷன் சென்று திரும்பும்
சிறுமியின்
துள்ளல் ஓட்டத்தில்
சேகரமாகியது
கழிந்த பொழுதுகள்...

Wednesday, September 29, 2010

விரல்வழிக் கசியும் துளிகள்...2

       ப்பொழுதும் தவறவிடாமல் பார்க்கும் ஒரே நிகழ்ச்சி விஜயில் வரும் ‘ஏர்டெல் சூப்பர் சிங்கர்’ தான்.இளங்கலைஞர்கள் பாடுகையில் ஏதோ நாமே மேடையில் பாடுவது போலொரு ஆனந்தம். இன்றும் அப்படித்தான். அதில் கிளாசிக் வகையைத் தேர்ந்தெடுத்த ஹரிணிதிவ்யா பாடிய பாடல் கேட்டவுடன் பிறந்ததே இப்பகிர்வு.
   
     ண்முகப்ரியா ராகமாம்.(நன்றி. எஸ்.பி. சைலஷா). எனக்குத் தெரியாது. ரவி சார் தெளிவு படுத்துவார் என நம்புகிறேன். ராஜாவின் இசையில் விரகமும், காதலும்(நல்லதோ கெட்டதோ காதல்தான் அது. வள்ளுவரின் வாக்கில் சொன்னால் ‘காமம்’), தவிப்பும், ஏக்கமும், இயலாமையும் பிரவாகமாய் வெளிப்படும் பாடல்.ஆரம்பப் பின்னிசையிலேயே நான் இதைத்தான் சொல்லப் போகிறேன் எனச் சொல்லிவிடுவார்.(இப்பல்லாம் படங்களுக்கு டிரைலர் காட்டுவது போல).
           
            குழலில் ஆரம்பிக்கும் தாகம், பின் வயலின்களின் வருகையால் ஆறுதலடையும் நேரத்தில் வந்துவிடுவார் ஜானகி ‘சொல்லாயா’ எனச் சொல்லிக் கொண்டு. உடனே ஆரம்பித்துவிடும் தபேலாவின் தட்டுக்கள் மற்ற ராஜாவின் பாடல்களில் வரும் தாலாட்டுத் தட்டுக்கள் அல்ல.சிறிதே சீண்டிப்பார்க்கும் செல்லத் தட்டுக்கள்.

    ல்லவி முடியவும் வரும் இசை சிதாரில் ஆரம்பித்துப் பின் வயலின்களைப் பாடவிட்டுப் பக்கவாத்தியமாகிவிடுகின்றது.
  சரணத்தில்
   ‘ஆகாய சூரியன் மேற்கினில் சாய...
    ஏகாந்த வேளையில் மோகமுள் பாய
    தூண்டிலில் புழுவாக திருமேனி வாட
    தாமதம் இனியேனோ இருமேனி கூ’ இதுவரையில் செல்லத்தட்டு தட்டிய தபேலா
அந்திவரும் தென்றல் சுடும் ஓர் விரகம் விரகம் எழும்’எனும் வரிகளில் வேக,விவேகமாக ரிதம் மாறி,  நம்மை ஒரு விதமாக உருட்டிச் செல்லும்.
இரண்டாவது பின்னிசையின் போது தபேலா மவுனமாக, வந்து விடுவார்கள் பிரதான வயலின் பாடகர்கள்.சிறிது தாபத்தை அது கொடுக்க புல்லாங்குழல் வந்து கசியவிடும் சோகம் இனிது.ஜானகியின் பங்களிப்பைப் பற்றி நானென்ன பெரிதாகச் சொல்லப் போகிறேன். அதெல்லாம் அனுபவிக்கணும்.


   கிளாசிக்கலோ, வெஸ்டர்னோ எதுவும் தெரியாத என்னைப் போன்ற பல பாமரர்களுக்கான இசைதான் இது.

   
            சைக்கான வித்து நல்வித்து. தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’.
அதிலிருந்து சில பகுதிகள் இப்பாடல் காட்சியோடு தொடர்புடையவை கீழே சிறிது தந்திருக்கிறேன்.

          "அங்கே யாருமில்லை” என்ற அர்த்தத்தில் அவள் உதடு பிதுங்கிற்று.முகம் பளபளவென்றிருந்தது.காதில் பூரித்த வைரத்தோடு கன்னத்தில் வீசிக் கொட்டிற்று.காதின் முன் மயிர் சற்று அதிகமாகவே கீழே இறங்கியிருந்தது, முகத்தின் களையை இன்னும் உயர்த்திவிட்டது. அந்த முகம் அழகி என்று சொல்வதே, இந்த இறக்கத்தால்தானோ என்னவோ! முகத்தில் ரோஜா நிறப் பவுடர் குளுகுளுவென்று கமழ்ந்தது. தலையில் வைத்திருந்த பூவின் ஓரம் வெள்ளையாக எடுப்பாகத் தெரிந்தது. பளீர் என்று மஞ்சள் குங்குமம். மூக்கில் ஒரு வைரப்பொட்டு நீலமாக இறைத்தது...... தங்கம்மா...


   

"நீ சோதனை செய்தாய் நான் தோற்றுவிட்டேன்., என்னைச் சோதனை செய்ததில் உனக்கென்ன பெருமை? சிங்கம் பூனையோடு பலப்பரீட்சை செய்வதுபோல்தான் இது. ஆனால்...அதாவது... என்ன.  இனிமேல் நான் அஜாக்ரதையாக இருக்க மாட்டேன். நேற்ற் இரவைப் போல் வெளிக்கதவைத் தாழிட்டு விடுவேன். மதில் காவலா, மனம் காவலா என்று சிரிப்பதுண்டு சிலர். ஆனால் உள்கதவும் திறக்காது என்பதற்கு அடையாளம்தான் வெளிக்கதவு மூடியிருப்பதும், வெளிக்கதவு மூடியிருந்தால் உள்கதவு திறவாது என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும்.”.........பாபு



“நேத்தி ராத்திரி நான் வந்து ஜன்னலில் நின்று தொண்டை வறளக் கத்தினேன். கதவைத் தட்டினேன்.நீங்கள் ஒன்றுக்கும் எழுந்திருக்கவில்லை. எப்படித்தான் இவருக்குத் தூக்கம் வருகிறதோ என்று நினைச்சுண்டே நின்னேன்.எனக்குத் தூக்கம் வரவில்லையே! எனக்குக் கோபம் கோபமாக வந்தது. ஒரு பொம்மனாட்டி மானத்தை விட்டு விட்டு எத்தனை நாழி ஒண்டியாக நின்னு கத்துகிறது.நீங்கள் கதவைச் சாத்திண்டு தூங்கினதுமே எனக்குப் பயமாயிருந்தது.உங்களுக்கு என்னைப் பிடிக்கவில்லையோன்னுதான் பயமாயிருக்கு....................”.........தங்கம்மாவின் கடிதம்...


  இப்போது பாடல் கேட்டு, முள்ளை ஏற்றிக் கொள்ளுங்கள்.

Monday, September 27, 2010

பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்

        ன்றைக்கு என்னவோ தெரியவில்லை. எட்டு மணிக்கெல்லாம் பசி வந்துவிட்டது.வழக்கத்திற்கு மாறாக வெளியில் சாப்பிடக் கிளம்பினேன்.அறையிலிருந்து கிளம்புகையிலேயே கண்ணாடி சன்னல்கள் திடீர் திடீரென மங்கலான வெள்ளொளியைத் துப்பிக் கொண்டிருந்தன.சற்றுப் பொறுத்து மெல்லக் காதில் விழந்தது இடி சத்தம்.சாக்கிரதை உணர்வில்.ஒரு கம்பி மட்டும் உடைந்து மரபான  வடிவத்தைக் கட்டுடைத்த படி இருக்கும் பச்சைக் குடையை எடுத்துக் கொண்டேன்.கதவு தாண்டித் தெருவில் கால்வைத்தவரை சிற்றின்பத் தூறல்கள்தான் கொஞ்ச ஆரம்பித்திருந்தன.குடையை விரிப்பது அவசியமில்லை.ஆனால் குடை தேவையென இடி சொல்லிக் கொண்டிருந்தது அவ்வப்போது. பத்தடி தூரத்தில் உணவகம். வட இந்திய வாசம் விட்டுப் போகக் கூடாதென இரண்டு ஆலு பராத்தாக்களைக் கேட்டேன்.மேசைமீதிருந்த ஸ்பீக்கர்களில் ஹிந்திப் பாடல் தூறிக் கொண்டிருந்தது.இந்தோரில் இருந்த மூன்று வருடம் வெளியிடங்களில் தமிழ் கேட்க நான் பட்ட கஷ்டம் என் சகிப்புத்தன்மையைக் கூட்டியிருந்தது.என் வட இந்திய நண்பர்களின் மனைவிமார்கள் செய்த ஆலு பராத்தாவின் மிருதுவில் பாதிதான் இருந்தது இங்கு கிடைத்த பண்டம். .தயிரும், வெங்காயமும் தனியாக வைத்திருந்தனர், ஏதோ வாய்க்கால் தகராறு போலும்.சிறு சிறு மெது திண்மங்களாக உள்வைத்து அமுக்கப்பட்ட உருளைக்கிழங்குத் துண்டுகள் பராத்தாவின் கூட்டணியில் சிறிது ருசியுடன் பசியைத் தணித்துக் கொண்டிருந்தன.இதற்குள் திடீரெனச் சுருதி குறைந்த பாடலும், உணவகத்தினுள்ளே தெறித்த துளிகளும் மழையின் வேகம் வலுத்ததைக் காட்டின.குழந்தையின் ஆர்வத்தோடு வேகமாகச் சாப்பிட்டு முடித்தேன்.கை கழுவ வெளியேதான் செல்லவேண்டும்.குடையின்றிச் சென்றதால் நிகழ்ந்த முன்னோட்ட நனைதலில் உடைகளில் எடை கூட ஆரம்பித்தது.இருபத்தி ஐந்து ரூபாய்களைக் கொடுத்துவிட்டு வெளிப்புகுந்தேன் மழைக்குள், கொஞ்சமாய்க் குடைக்குள்ளும்.

          யோத்தி தீர்ப்பு நாளை வந்துவிட்டால், கலவரம் வந்துவிட்டால்,ஊரடங்கு போட்டுவிட்டால்,கடைகள் அடைத்துவிட்டால்.....பல ட்டால்கள் மனதிற்குள் புதிதாகக் கிளைவிட்டுப் பெருக ஆரம்பித்திருந்தன.காய்கறிகள் வாங்க வேண்டும்.பப்பிள் டாப்பில் தண்ணீரின் அளவு திருகும் குழாய்க்குக் கீழே மண்டியிட்டிருந்ததும் நினைவுக்கு வந்தது.நீருக்குச் சொல்லவேண்டும்.இன்னும் எதை எதை மறந்தேனோ, எதை நினைத்தேனோ தெரியவில்லை.சிறு கவலைகள் மழைக்குள் உருத்தெரியாமல் போய்க் கொண்டிருந்தன.தெருவிற்குள் இறங்குவதற்குள் திடீரென இருள் கவ்விக் கொண்டது.மின்சாரம் என்னவோ மழையின் சம்சாரம் போலும். மழை வந்தவுடன் இது முகத்தைத் திருப்பிக் கொள்கிறது..எப்பொழுது திரும்ப வருமெனத் தெரியாது.ஆங்காரமோ, ஆர்ப்பரிப்போ தெரியவில்லை, மழை காட்டுக் கத்தலாய்ப் பெய்ய ஆரம்பித்திருந்தது.சாலையோர மணல் இப்போது செம்புலப் பெயல் நீராகி இருக்கும். இருட்டில் பார்க்கமுடியவில்லை.செருப்புகளினூடாகக் குறுகுறுத்த பாதங்கள் அதன் அடர்த்தியை உணர வைத்தது.ஒழுங்கற்ற எல்லைகொண்ட சாலைகளில் பாதியும், மழைச்சேற்றில் பாதியுமாக நடக்க ஆரம்பித்தேன்.வாகனங்கள் வருகையில் சற்று நின்றுதானாக வேண்டும்.ஒன்று அதன் எல்லை எனக்குப் பிடிபட வேண்டும். இல்லை நான் நிற்பதாவது வாகன ஓட்டிக்குத் தெரியவேண்டும்.எதிரெதிர் வாகனங்கள் பீய்ச்சிச் செல்லும் ஒளிக்கற்றைகளில் மழைக்கைகளின் ஒழுங்கற்ற நடனம் தெளிவாய்த் தெரிந்தது.பெரிய, சிறிய கோட்டுத் துண்டுகள் ஒன்றையொன்று இடைவெட்டியும்,நேர் சென்றும் கோணங்கித்தனமானதொரு ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தன. சாலையில் கிடந்த குழிகளிலெல்லாம் குழந்தைகளைப் போல் குதித்துக் கொண்டிருந்தது மழை.இந்நேரத்திற்கெல்லாம் சிறிது குளிரும் உள்ளேறி, ஈர உடைகளினால் மேலும் வலுவானது.வாகனங்கள் கடந்தபின் இருளின் ஆதிக்கம் எதையுமே பார்க்கவிடவில்லை. எதிரிலிருந்து ஒரே ஒரு வெளிச்சப்புள்ளி எனது உயரத்தில் வேகமாக வந்து கொண்டிருந்தது. யூகிக்க முடியவில்லை. என்னைக் கடந்த சில நொடிகளில் புரிந்தது. சைக்கிளில் வந்த ஒருவன் வாயில் செல்போனை வைத்துக் கொண்டு வந்திருக்கிறான் என்பது. செல்போனின் தலையிலிருந்து வந்ததுதான் அவ்வொளி. என்னை நொந்து கொண்டேன். நோக்கியா 1100 வைத்திருந்தால் வசதியாக இருக்குமே என்று. விலையுயர் செல்போன்களில் டார்ச்சும் இல்லை. மழை பட்டால் அதற்கு வாழ்வும் இல்லை. இன்னொன்றும் நினைவுக்கு வந்து தொலைத்தது.பேட்டரி சார்ஜ் நிலை காட்டும் இடம் ஒற்றைப் பல்லுடன் இருந்தது. அது பொக்கைவாயாவதற்குள் மின்சாரம் வந்துவிட வேண்டும்.

                டக்க நடக்க எனது செருப்பு பின்புறம் பாதி நீரை வாரியடித்து பேண்டினைத் துவைத்துக் கொண்டிருந்தது. நாளைக் காலையில் பார்க்கையில் பான்பராக் எச்சில் துப்பியது போல் செம்மண் பொட்டுகள் ஒழுங்கின்றி ஒட்டியிருக்கும்.மறுபடியும் இடித்த இடி மழையைப் பற்றியே நினைக்கச் சொன்னது.கலைத்துவிட்ட தேன்கூட்டினை மீண்டும் சுற்றிச் சுற்றி ஒட்டும் தேனீக்களாய், குடை இருந்தும் என் முகத்தை நனைத்துக் கொண்டிருந்தது மழை.ஏற்கெனவே ஒரு கம்பி போன நிலையில் , சற்று வேகமாக நடந்தால் என்னிடமிருந்து மழையைக் காப்பாற்றுவது போல் மேலாகத் திரும்பிக் கொள்கிறது குடை. மழை பற்றி மனதில் எழுதிய வாசகங்களை மழையே அழித்து வேறொன்றை எழுதிச் சென்றது.இப்போது சாலையில் சிறிது ஒளி பின்னிலிருந்து வந்தது. வெகு தூரத்தில் வரும் நான்கு சக்கர வாகனமாயிருக்கலாம்.ஒளி கூடக் கூட எனக்கு முன்னால் ஒரு உருவம் தயங்கித் தயங்கிச் சென்று கொண்டிருந்தது தென்பட்டது.வலது தோளில் தொங்கவிடப்பட்ட கைப்பையினை இறுக்கிக் கொண்டிருந்தது அவளது கை.மழையில் நனைந்து உடலோடு ஒட்டியிருந்தது சுடிதார்.ஏற்கெனவே கால்களை இறுக்கும் கீழ் ஆடை மழையால் இன்னும் நெருங்கி, கோயில் சிலைகளின் கால்கள் போல் காட்டியது.’அக்கினிப் பிரவேசம்’ கங்காவைப் பற்றிய ஜெயகாந்தன் வர்ணனை நினைவில் வந்து போனது.ஆனால் இவளுக்கு இருபது வயதிருக்கலாம்.சடாலெனக் குனிந்து இடது கையில் தனது ஹை-ஹீல்ஸ்களைக் கையில் எடுத்துக் கொண்டு நடை போட்டாள். அதற்குள் வாகனம் கடந்து விட அவளும் பார்வையில் இருந்து விடைபெற்று விட்டாள்.எப்படி இருக்கும் முகம் கற்பனை செய்தேன். பாழாய்ப் போன சினிமாப் புத்தி ,பழைய நடிகைகள் மழையிலும் கரையாத மேக்கப் போட்டுக் கொண்டு கண்முன் வந்து போனார்கள். எதுவும் வாங்காமலேயே வீட்டிற்குள் நுழைந்தேன்.ஒற்றை மெழுகுவர்த்தியின் தரிசனத்தில் பொன்னாய் சொலித்துக் கொண்டிருந்தது அறை.நிசப்தம் கூட அதன் ஜோதியைக் கூட்டுவது போல் தோன்றியது.குடையை விரித்த வாக்கிலேயே வைத்துவிட்டு உடை மாற்றினேன். சன்னல் வழியே வெளிப்பார்க்கையில்தான் மழை குறைந்திருந்ததும், மேகத்தோடு விளையாடும் நிலவும் தெரிந்தது. இன்றைய நிலா இன்னும் சுத்தமாகக் காட்சியளிப்பது போல் தோன்றியது.வெளியில் இருந்த வயலில் வெட்டியிருந்த வாய்க்கால்களில் நிலவின் நீள்வட்ட நகல்கள் பளிச்சிட்டுக் கொண்டிருந்தன.
வாய் பாடலொன்றை முணுமுணுக்க ஆரம்பித்தது.’பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்’.
இரண்டடி பாடுவதற்குள் ,கண்ணைக் கசக்க வைத்த வெளிச்சம் பாடலை நிறுத்தியது. அறை மூலையிலிருந்து ‘எந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்திரன்’ கதற ஆரம்பித்து விட்டான். வாழ்க சன் டிவி...!வளர்க மின் துறை....!!

Wednesday, September 15, 2010

இளையராஜா-இப்பவும் நான் ராஜா

இன்னொரு முறை மகிழும் வாய்ப்பெனக்கு வந்திருக்கிறது. இளையராஜாவுக்கு சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான தேசிய விருது கிடைத்திருக்கிறது.இதுநாள் வரை இல்லாத ஒன்றாக, ‘பின்னணி இசை’க்கென தனி விருது தொடங்கப்பட்டு அதன் முதல் விருதே இளையராஜாவுக்குத்தான் என்பதில் பெருமைப்பட்டுக் கொள்ளட்டும் அவ்விருது.’பழசிராஜா’(மலையாளம்) படத்திற்குக் கிடைத்திருக்கிறது. இதுவரை இளையராஜாவுக்கு விருது பெற்றுத்தந்த படங்கள் அனைத்தும் இசையை மையமாகக் கொண்ட படங்களே. சாகரசங்கமம்(தெலுங்கு-1984-தமிழில் ‘சலங்கை ஒலி’),சிந்து பைரவி(1986), ருத்ரவீணை(தெலுங்கு-1989-தமிழில் ‘உன்னால் முடியும் தம்பி’). ‘பழசிராஜா’வோ முற்றிலும் வரலாற்றுப் பின்னணியில் வெளிவந்த படம். இதற்கு முன்பே ‘சிறைச்சாலை’,’ஹேராம்’ படங்களுக்குக் கொடுத்திருக்க வேண்டும். ‘சேது’,’நான் கடவுள்’ இன்னும் பல படங்களின் பின்னணி இசை விருதுக்குத் தகுதியானவையே. நடுவர் குழு ஹிட்டான பாடல்களை மட்டும் கவனித்திருக்கலாம்.அல்லது ராஜாவின் பாடல்களுக்குள் இருக்கும் சூட்சுமத்தைப் புரிந்து கொள்ளத் தெரியாமலிருந்திருக்கலாம்.இதில் இரண்டாவது வகையே அதிகம் என நினைக்கிறேன்.‘பழசிராஜா’வின் பாடல்கள் எவ்விதத்திலும் குறைந்தது இல்லை.

சங்கீதங்கள் மட்டுமல்ல ராஜாவின் மவுனம் கூடச் சிறந்த இசைதான். பாலுமகேந்திராவின் கூற்று இது:’என் படங்களில் எங்கு இசை பேச வேண்டும். எங்கு மவுனம் இசைக்க வேண்டும் என்பது என் ராஜாவுக்குத் தெரியும்.’பாலுமகேந்திராவின் ‘வீடு’ படத்தின் பின்னிசையைக் கவனியுங்கள்.


பாண்டியராஜனின் ‘ஆண்பாவம்’ படத்தின் பின்னணி இசை ரசிக்க....




இளையராஜா-மணி ரத்னம் இணைவில் உருவான ஒரு முத்து கீழே...


இப்போதைக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் ராஜாவுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்...

Monday, July 26, 2010

பெங்களூர் வாசம்...


   மே மாத இறுதி வாரத்தின், ஒரு ஞாயிறு காலையில் லால்பாக் கார்டனுக்கு முன் இறக்கிவிடப் பட்டிருந்தேன்.ஒன்றும் புரியாமல் விழித்த நிலையிலிருந்து இப்போது ‘ஒயிட் ஃபீல்டில்’ வீடெடுத்து, ‘சல்ப்ப’ சல்ப்ப ஓரிரண்டு இடங்களுக்குச் சென்று வந்ததில் பழகிவிட்டது பெங்களூர். இன்னும் இனிப்புச் சாம்பார் இட்லிதான் ஒத்துக் கொள்ளவில்லை.



        பெங்களூரின் க்ளைமேட் பற்றி நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நான்கு மணி வாக்கில் மழை ஆரம்பித்து விடுகிறது. திடுமென நின்றும் போய்விடுகிறது. நீர் வண்ண ஓவியம் ரசிப்பது போன்ற ஒருவிதக் கிறக்க நிலையை ஏற்படுத்திவிடுகிறது.பேருந்துகளின் கன்னடப் பெயர்ப்பலகைகள்தான் பயமுறுத்துகின்றன.எனினும் கொஞ்சும் தமிழ்,கொஞ்சும் ஹிந்தி என காக்டெயிலாக விசாரித்தால் பதில் கிடைத்து விடுகிறது.



    ’கார்டன் சிட்டி’ என்பதால் சாலையோர மரங்களும், அதன் நிழலில் கையேந்தி பவன்களும் கச்சிதமாகப் பொருந்தி இருக்கின்றன. கண்ணாடி போர்த்திய கட்டடங்களின் அடர்த்தி அதிகமாக இருக்கிறது.முதல்வர் எடியூரப்பாவின் சாதனைப் பதாகைகளைப் பார்க்கையில் திராவிடக் கலாச்சாரத்துக்கு சற்றும் சளைத்தவரல்ல என்பதும் புரிகிறது. விஷ்ணு வர்தனின் ‘ஆப்த ரக்‌ஷா’ இன்னும் ஓடிக் கொண்டிருப்பது போஸ்டர்களில் தெரிகிறது.



    பெங்களூரில் எனக்குத் தெரிந்த ப்ளாக்கர் என்ற அளவில் ‘காலடி’ ஜெகன்  இருக்கிறார். அவருக்கு ஒரு காலடித்துப் பார்த்தேன். என்ன ஆச்சர்யம், நான் வேலை பார்க்கும் பில்டிங்கில்தான் அவரும் இருக்கிறார். ஒருநாள்  மதிய உணவு இடைவேளையில்தான் அவரைச் சந்தித்தேன். மனிதர் ப்ரொஃபைல் ஃபோட்டோவில் இருப்பதை விட இன்னும் இளமையாக இருக்கிறார்.அதிராமல், ஆனால் அசராமல் பேசுகிறார். சுய விவரத்தில் ஆரம்பித்து சாரு புராணம் வரை பேசி அப்போதைக்கு முடித்தோம்.இன்னொரு விரிவான சந்திப்புக்கு வாக்கு அச்சாரம் போட்டு வைத்தேன். அவ்வப்போது ஹைக்கூ சந்திப்புகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

         தேவதைகளின் தேசத்திலிருந்து , காலப்பயணியும் (இரா.வசந்தகுமார்) இங்கு வந்து சேர்ந்துவிட்டார் என்பது உபதகவல். இரு வாரங்களுக்கு முன்பொரு சனிக்கிழமை சந்திக்கலாமென்றார். லீலா பேலஸ்(’சிவாஜி’ படத்துல வர்ற ஹோட்டல்ன்னு கேள்விப் பட்டிருக்கேன்) சென்று அங்கிருந்து திப்பசந்திரா செல்லலாமென எண்ணியிருந்தேன். வால்வோவில் ஏறி ஒயிட் ஃபீல்டிலிருந்து லீலா பேலஸ் செல்வதற்குள் இளையராஜா பனிரெண்டு சிம்பொனிகளைக் காதுகளுக்குள் நுழைத்திருந்தார்.ஒரு மந்தமான முற்பகலில் ம்ரங்களின் இடைவெளியில் ஒய்யாரமான லீலா பேலஸின் முன்பு நின்றிருந்தார் வசந்த். குசல விசாரிப்புகளை ஒரு காஃபிக் கடையில் முடித்துவிட்டு,ஹோட்டலின் உள்ளே இருந்த புக்ஸ்டாலுக்குச் சென்றோம்.எல்லாப் புத்தகத்தின் தலைப்புமே A-Z  எழுத்துக்களை  மட்டுமே வெவ்வேறு பெர்முடேஷன் காம்பினேஷன்களில் கொண்டிருந்ததால், நான் ஸ்டேஷனரி பகுதிக்குச் சென்றேன்.இடுப்பில் கட்டும் தாயத்து போன்றிருந்த ஒரு கீ செயினின் மேல் விலை ரூ.550/-only(அது ஒண்ணுதான் குறைச்சல்) ஒட்டப்பட்டிருந்தது. சரி, தர்காவில் மந்திரித்த தாயத்து போல என எண்ணிக் கொண்டு,புத்தகம் பார்க்க வந்த பூக்களை நானும், புத்தகங்களை வசந்தும் கண்களால் புரட்டிக் கொண்டிருந்தோம்.
லீலா பேலஸின் முகப்பில் வரவேற்’பூக்கள்’

       டையில் சிறிது வயிற்றுக்கு ஈந்து விட்டு, மார்க்கெட் செல்ல முடிவெடுத்தோம். அங்கு திப்பு சுல்தானின் கோட்டை ஒன்றும், அரண்மனை ஒன்றும் இருப்பதாகச் சொல்லியிருந்தார்.பேருந்தில் கண்டக்டரிடம்,’ மார்க்கெட் ஸ்டாப் வந்தால் சொல்லுங்க’ என்றவனை இடை மறித்து, ‘தேவையில்லை உங்களுக்கே தெரிந்து விடும்’ என்று ஒரு ஞானியைப் போல் புன்னகையுடன் கூறினார் வசந்த். ஆம். சொல்லித் தெரிவதில்லை மார்க்கெட் என்பதைப்போல மக்களும்,சத்தமும் இரண்டறக் கலந்து தெறித்துக் கொண்டிருந்தது.
    
திப்பு சுல்தான் கோட்டை

           பேருந்து ஏறுவதற்கு முன்பிருந்தே எங்களைத் தொடர்ந்து வந்த கருமேகங்கள்,மார்க்கெட்டில் இறங்கியவுடன் வேலையைக் காட்ட ஆரம்பித்தன.அச்சூழலை வீணாக்கிடாமல், ஒரு திறந்த வெளி உடுப்பி ஓட்டலில் ஸ்ட்ராங் காஃபியுடன் கொண்டாடினோம் மழையை. குழந்தை ஒழுங்கின்றி அடுக்கிவைத்த விளையாட்டுப் பொருள்களைப் போல பேருந்துகள் நின்று கொண்டிருந்தன. கம்பித் தடுப்புகளினூடே,கடைகளின்கூரைகளையே தற்காலிகக் குடைகளாகக் கொண்டும், நனைந்து கொண்டே நகர்ந்தோம்.ஐந்து நிமிட நடையில், கொஞ்சம் உன்னிப்பாகத் தேடிப்பார்த்தால் கிடைத்து விடுகிறது திப்புவின் கோட்டை.உள்ளே பிள்ளையார் கோயில். அதைச்சுற்றிலும் சாய்வான கோட்டைச் சுவர்கள்: அதில் ஆங்காங்கு பொறிக்கப்பட்ட சில சிற்பங்கள்(திப்பு புலியுடன் மோதும் காட்சி உட்பட):சுற்றிலும் புல்வெளி எனத் தனித்து விடப்பட்டிருந்தது கோட்டை.(படங்களுக்கு இங்கு செல்க). பார்த்து முடித்தவுடன் இதிலென்ன பார்க்க வந்தோம் என்ற அசுவாரஸ்யக் கேள்வி எழாமலில்லை.       

       கோட்டையிலிருந்து இன்னுமொரு ஐந்து நிமிட தூரத்தில் விஸ்தாரமாய் வரவேற்கிறது திப்புவின் அரண்மனை. முன்புறம் சீராக வெட்டிவிடப்பட்ட புல்வெளியும், அதற்கு அலங்காரம் சூட்டியது போல் வண்ண மலர்களும் வளர்ந்திருந்தன. திருமலை நாயக்கர் அரண்மனையைப் போல் பிரம்மாணடம் எதிர்பார்த்த எனக்கு இங்கும் சற்று ஏமாற்றமே. ரிசசன்(Recession) டைமில் கட்டியிருப்பார்கள் போலும், ரொம்பச் சிக்கனமாகவே இருந்தது அரண்மனை. நுழைவிலேயே வரவேற்கிறது சுல்தானின் தர்பார்.மரத்தாலான தூண்கள் ,உச்சியில் பல வளைவுகளுடன் முடிகின்றன. இதுபோலப் பல அடுக்குகளால் நிறைந்திருக்கின்றது தர்பார் அறை. முன்புறம் போலவே ,பின்புறமும் இதையொத்த அமைப்பு இருக்கிறது. தற்போதைய சட்டசபையின் கீழவை, மேலவை போன்று செயல்பட்டதா எனத் தெரியவில்லை.

திப்பு சுல்தான் அரண்மனை தர்பார்
            திப்பு சுல்தான் அமரும் இடம் நடுநாயகமாக இருக்கிறது.நானும் அங்கு நின்று ஒரு ராஜ பார்வை பார்த்துக் கொண்டேன். அதன் இருபுறமும் ஓரங்களில், மாடிக்குச்செல்லும் படிக்கட்டுகள் அடைத்தே இருக்கின்றன.ராஜ ரகசியம் போலும்.இயல்பான வண்ணம் மாறிவிடாதபடி இருக்க கண்ணாடிச் சட்டங்களில் ஓவியங்கள் சிறையிருக்கின்றன.அதற்கு முன்பே நம்மக்கள் அங்கு,தங்கள் தெய்வீகக் காதலை ,இதயத்தில் அம்புவிட்டுக் கல்வெட்டியிருக்கிறார்கள்.

   கீழே வந்தால் அருங்காட்சியகம் இருக்கிறது. திப்புவின் வாழ்க்கை வரலாறு, முக்கிய நிகழ்வுகள், அவரின் செல்ல புலிப்பொம்மை(புலிப்பொறி எனலாம்.அதன் காலடியில் ஒரு வெள்ளைவீரன் சிக்கிக்கொண்டிருப்பான்.பொழுதுபோகாத போது அதனை இயக்கி, உறுமலோடு கேட்டுக் கொண்டிருப்பாராம் திப்பு சுல்தான்),அவரின் ஆட்சிப்பகுதிகள்,எழுச்சி,வீழ்ச்சி அனைத்தும் பதிவுகளாக இருக்கிறது. அவர் தயாரித்த ஏவுகணையொன்றும் அறையின் நடுவே கண்ணாடிப் பேழைக்குள் பாதுகாத்து வைக்கப் பட்டிருக்கிறது. புகைப்படம் எடுக்க அனுமதியில்லை. நைஸாகச் சிரிக்கும் பாதுகாவலரிடம் பத்து ரூபாய் கொடுத்துப் படமெடுப்பது உங்கள் திறமை.







        




          

Sunday, July 11, 2010

மதராசப் பட்டினம் - மூன்று பார்வைகள்

  1.கடந்த ஓரிரு மாதங்களாகவே சென்னை என்னைச் சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருக்கிறது. காலப்பயணி வீட்டிலிருந்த நூலகத்தில் நான் எடுத்து வந்த புத்தகத்திலிருந்து தொடர ஆரம்பித்தது சென்னை. மே மாத மழை நாளில் அவரது வீட்டிற்குச் சென்ற போது அவர் எழுதிய ’கிளிமுற்றம்’ சிறுகதைத் தொகுப்பையும், பிரபஞ்சன் எழுதிய ‘வானம் வசப்படும்’நாவலையும் எடுத்து வந்தேன். பஸ் ஜன்னலின் வழியே, பேண்ட்டை நனைத்த மழையின் அத்துமீறலையும் பொருட்படுத்தாமல் படிக்க ஆரம்பித்தேன்.கி.பி. 1740 களில், புதுச்சேரியின் கவர்னராக இருந்த ஃப்ரெஞ்சு துரை துய்ப்ளெக்ஸிடம், துபாஷ் ஆக அதிகாரத்திலிருந்த ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்புகள் அடங்கியதுதான் இந்த நாவல்.இது தினமணிகதிரில் தொடராக வந்த சமயம் ,அரை டவுசரோடு படித்திருக்கிறேன். அக்காலத்தை நினைவூட்டும் வகையிலும், ப்ளாக் பேரே அதுவாக அமைந்துவிட்ட படியாலும் ஆர்வத்தோடு படிக்க ஆரம்பித்தேன்.அந்த காலகட்டத்தில் புதுச்சேரியிலிருந்த பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சிமுறையும், அவர்கள் தங்களுக்குப் போட்டியாக வந்த ஆங்கிலேயர்களை எதிர்க்கும் முகமாக சென்னையைக் கைப்பற்றப் போராடியதும், பின்னாளில் ஹீரோவாக விளங்கிய ‘ராபர்ட் க்ளைவ்’ இதில் துக்கடா பாத்திரத்தில் இண்ட்ரோ ஆவதும், போகிறபோக்கில் சென்னையைப் பற்றியும் தொட்டுவிட்டுச் சென்றது நாவல்.


  2.டுத்த தற்செயல் நிகழ்ந்தது எழுத்தாளரான எஸ்.ராமகிருஷணனின் ‘யாமம்’ நாவல் வாங்கியது.இதில் மைய இழையாக இரவும், அதனூடே பின்னப்பட்ட நான்கு கதைகளுமாக இருந்தது.கதை நிகழும் களமாக அன்றைய ‘மதராப் பட்டணமும்’ அதன் சுற்றுப் புற ஊர்களும் காட்டப் படுகின்றது.(அவையெல்லாம் இன்று ‘ஒருங்கிணைந்த சென்னை’ ஆகிவிட்டது). இரவின் புதிரையும், வாசனையையும் ஒத்த ‘யாமம்’ என்னும் அத்தர் ஒரு குறியீடாகக் காட்டப் படுகிறது. உடலெங்கும் மெல்லிய பூக்களாய்க் காமம் பூக்கச்செய்யும் வல்லமை படைத்த யாமமானது, கதைகளினூடே தெரிந்தும், தெரியாமலும் விரவி மனிதர்களையும், மனங்களையும் அசைத்துப் பார்க்கிறது. மீர்சாகிப் பேட்டையில் ‘யாமம்’ தயாரிக்கும் அப்துல் கரீம், அல்லிக்கேணியில்(திருவல்லிக்கேணி) வசிக்கும் நில அளவையாளர் பத்ரகிரி, லண்டனில் கணித மேற்படிப்புக்குச் செல்லும் அவன் தம்பி திருச்சிற்றம்பலம், பங்காளிச் சண்டையில் சொத்துக்களை இழக்கும் நிலையிலிருக்கும் வாழ்ந்து கெட்ட கோமான் கிருஷ்ணப்ப கரையாளர் எனக் கதா பாத்திரங்களின் வாழ்க்கையின் பின்னே அன்றைய மதராப் பட்டிணத்தையும் நிழல் ஓவியமாக்கியிருக்கிறார் எஸ்.ரா.

       ப்துல் கரீமின் கனவில் அவரது குடும்ப ஃபக்கீர் வந்து பேசுவது போல ஆரம்பித்து, லண்டனில் டச்சுக்காரர்கள் குறுமிளகின் விலையை ஏற்றியதால், தாங்களே இந்தியாவில் நேரடி வணிகம் செய்ய பிரிட்டிசார் எண்ணிச் செயல்படுதலும், வந்த பிரிட்டிஷார் ஷாஜகான் மகளுக்கு ஏற்பட்ட தீக்காயத்தைக் குணப்படுத்தி, நன்மதிப்பை வணிகமாக்கியதும், உள்நாட்டு போர்களின் போது பயன்படுவதற்காக, மதராப் பட்டிணத்தில் மேப் தயாரிக்கும் நில அளவைகளில் ஈடுபடுவதும் என நிகழ்வுகள் தனியாகச் சொல்லப் படாமல், கதைகளின் போக்கிலேயே பின்புலமாகச் சொல்லப் படுகிறது. எஸ்.ராமகிருஷ்ணனின் உதாரணங்கள் வசீகரிக்கும் வார்த்தைகளால் வாசிப்பைத் தூண்டினாலும், சில இடங்களில் அதுவே ஓவர்டோஸ் போலவும் தோன்றுகிறது.ஒவ்வொரு கதையும், ஒரு முடிவைக் கொண்டிருந்தாலும், அங்கே சொல்லப் படாத இன்னொரு கதையும் ஆரம்பமாகிறது.மதராப் பட்டிணம் பற்றிச் சொல்லப்பட்டவைகளும், ஆங்காங்கு அதன் நிகழ்வுகளைக் கதையோடே பிணைத்திருக்கிறது. நல்ல வாசிப்பனுபவம் தந்த ஒரு நாவல் ‘யாமம்’.

    3.இதன் தொடர்ச்சியாகவோ, தொடர்ச்சியில்லாமலோ நேற்று ‘மதராசப் பட்டினம்’ படம் பார்க்க நேர்ந்தது. வயதான பிரிட்டிஷ் மூதாட்டியிடமிருந்து தொடங்கும் கதை 1940 களில் இருந்த சென்னையாக விரிகிறது. ‘மதராசப் பட்டினத்தின் தேம்ஸ்’ எனக் கூவத்தைக் காட்டுவதிலிருந்து , அன்றைய செண்ட்ரல் ஸ்டேஷன், ஸ்பென்சர் ப்ளாசா எனக் கதையின் பின்னணியாகச் சென்னையைக் காட்டித் தொடர்கிறது படம்.முதல் பாதியில் வரும் பிரிட்டிஷ் பெண் ஏமி(மெழுகுச் சிலை போல இருக்கிறார்.நடிக்கவும் செய்கிறார்), இந்திய சலவைத் தொழிலாளி பரிதியின் காதல் சுவாரஸ்யம்.மறைந்த நடிகர் வி.எம்.சி.ஹனீஃபாவின் பண்பட்ட நகைச்சுவை நடிப்பும் பெரும்பலம். பாடல்களில் தனித்துத் தெரிந்த ஜி,.வி.பிரகாஷ்குமாருக்கு, பின்னணி இசையில் A,B,C தவிர வேறெதுவும் தெரியவில்லை.(ஒரு தடவை ‘சிறைச்சாலை’ படத்தைப் போட்டுப் பார்த்திருக்கலாம்). அவரைச் சொல்லியும் ஒன்றுமில்லை. இரண்டாம்பாதியில் படம் தொங்கிவிடுகிறது. முதல் பாதியில் கொஞ்சம் பின்னாடி தூக்கிப் போட்டு, இரண்டாம்பாதியில் கத்தரிக்கு வேலை கொடுத்திருந்தால் படம் க்ளாஸிக்காக இருந்திருக்கும். ஆர்ட் டைரக்டர் மற்றும் ஒளிப்பதிவாளர் இருவரும் ,இயக்குனர் விஜய்க்கு நல்ல வேலை செய்து இருக்கிறார்கள். மதராசப் பட்டினம்-அதிகம் எதிர்பார்க்காமல் ஒரு தடவை பார்த்துவிட்டு வரலாம்.

Sunday, July 4, 2010

மீண்டும் மீண்டும் நான்...

      தூசி படிந்த இந்தோர் வாழ்க்கையில் கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் ஓடியதே தெரியவில்லை. காலைகள் கச்சோரி, சமோசாவிலும், மற்றையப் பொழுதுகள் சுட்ட ரொட்டிகளிலுமே தீர்ந்திருந்தன.சுடுவதில் சென்னையை மிஞ்சக்கூடிய வெயிலும் ,நடுக்குவதில் டெல்லியை நெருங்கும் குளிருமாய்க் கழிந்து விட்டிருந்தன பருவங்கள்.கட்டிடங்களும், கார்களும் மேட்டுத்தன்மையைக் காட்டிச் சிரித்துக் கொண்டிருந்தன. சிறப்புப் பொருளாதார மண்டலமிருப்பதால், தலைநகரான போபாலை விடவும் கவர்ச்சி காட்டிக் கொண்டிருந்தவள் இந்தோர்தான்.


       இங்கு அதிகம் ஊர் சுற்றிப் பார்க்காவிட்டாலும் , என்னைச் சுற்றிப் பார்த்துக் கொண்டுதானிருந்தேன். பான் பீடா மற்றும் பானிபூரிக் கடைகளால் இந்தோரின் தெருக்கள் கலகலப்பாகவே இருந்தன.எல்லா நகரங்களும் பெயர் நீக்கிப் பார்த்தால் ஒன்றுதான் என்பது போல இங்கும் மக்களின் வாங்கும் வசதிகளும், அதற்கு ஈடு கொடுக்கும் அம்பானி,பிர்லாக்களின் ஷாப்பிங் மால்களும் அதிகம். ஆங்காங்கே புராதனப் பறை சாற்றும் கோட்டைகளுக்கும் பஞ்சமில்லை. நம்மூர் டி.நகர் போல  ‘ராஜ்வாடா’ எனும் ஏரியா உண்டு.எல்லாம் குறைவுதான் போக்குவரத்து நெரிசலைத் தவிர. சாலைகளில் நால்வர் பயணிக்கும் பைக்குகள் போக்குவரத்து விதிகளுக்குப் போக்குக் காட்டிச் சென்று கொண்டிருக்கும்.பேருந்து வசதிகளில் வடக்கு, தெற்கை விட பத்து மடங்கு குறைவுதான்.மாருதி ஆம்னிக்கள்தான் இந்தோரின் ஷேர் ஆட்டோக்கள். அசராமல் ஆட்களைத் திணித்துக் கொண்டு உடல் பிதுங்கப் பறந்து கொண்டிருக்கும். ஆட்டோக்காரர்கள் எல்லோரும் அநியாயத்துக்கு நல்லவர்கள்.பேரம் பேசிப் பழகவேண்டியதில்லை. மண்ணெண்ணை,கேஸ் உபயோகத்தால், நம் பர்ஸ் மெலியாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.

           தீபாவளி, பொங்கல் கூட கொண்டாடிப் பழக்கமில்லாத நான், தாண்டியாக்கள் பார்த்து நவராத்திரிகளும், வண்ணம் பூசி ஹோலிக்களும் கொண்டாட  ஆரம்பித்திருந்தேன். அலங்கார வளைவுகள், அதிகப்படியான போஸ்டர்கள் இல்லாத அமைதியான தேர்தல்கள் பார்த்தேன். ஏழே கால் மணிக்கு முகூர்த்தம் வைத்து பொங்கல்,இட்லி,கேசரி+காபியுடன் கல்யாணங்களுக்குப் போய் வந்த எனக்கு, 40,50 வகை உணவுகளுடன், டீ.ஆர் படம் போல செட்டுப் போட்ட இரவுக் கல்யாணங்கள் பழக ஆரம்பித்திருந்தது.(அப்போ ஃபர்ஸ்ட் பகல்தான் கொண்டாடுவாங்களா...???)

     இன்னும் சொல்லாமல் விட்டது யுவதிகள். எல்லோருக்கும் அப்படியொரு தேஜஸ்.ஆனால் அழகைப் பாதுகாக்கிறேன் பேர்வழி என்று பெரிய கைக்குட்டை ஒன்றால் முகத்தைச் சுற்றி மூடி விடுகிறார்கள், படைப்பின் உண்மைக் காரணம் அறியாமல். சரி மன்னித்து விடுவோம்.

        ந்தோரில் இருந்த காலங்களில் பல விஷயங்களில் மாறி இருந்தேன் கஷ்டப்பட்டு.ஆறு மணிக்கு முன் எழுந்தேன்.ஒரு மணிக்கெல்லாம் படுக்க ஆரம்பித்தேன். காஃபி மறந்தேன்( நல்ல காஃபி கிடைப்பதில்லை). H2O வை நினைவூட்டினாலும் டீ குடித்தேன்.பன்னீர் சாப்பிடப் பழகினேன்.அருவிகளில் நனைந்தேன். ட்ரெக்கிங் செய்தேன்.இப்படிப் பல தேன்கள். பல இனித்தன. சில கசந்தன.


                
     ஆட்டோமொபைல் உதிரிப் பாக தயாரிப்பு நிறுவனத்தில் வேலைக்கு இருந்தேன்.நிறையக் கற்றுக் கொண்டேன்.வேலை பார்ப்பது, வேலை பார்ப்பது போல நடிப்பது என அனைத்துமடங்கும். எக்செல் ஷீட் முதற் கொண்டு, எஞ்சின் அசெம்பிளிங் வரை செய்யும் நிர்பந்தங்களும் ஏற்பட்டன.ஆறு நாளும் வேலை.ஆறாம் நாள் வேலை வந்தால் ஏழாம் நாளும் வர வேண்டும். வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே ஊருக்கு வரமுடியும். அதுவும் குருவி போல் சேர்த்த விடுப்புகளை ஒரே நேரத்தில் எடுத்து வருவேன். கடைசியில் அது யானை வாய்ப்பட்ட அவலாக மாறிவிட்டிருக்கும்.



இன்னும் எத்தனையோ விஷயங்கள் விழி நுழைந்தது, செவி புகுந்தது, இதயத்தில் இறங்கியது, இப்போதைக்கு இது போதும் இந்தோரைப் பற்றி...


             ஓவர் டூ பெங்களூர்....

    டந்த மே மாதத்தின் இறுதி நாட்களில், ஒரு சுபயோக சுபதினத்தில் பெங்களூர் வந்தடைந்தேன்.இங்கு வேலை கிடைத்திருக்கிறது. இனி அடிக்கடி ப்ளாக் அப்டேட் செய்யப் படும் என எச்சரிக்கை விடுத்துக் கொள்கிறேன்...

Friday, April 9, 2010

விரல்வழிக் கசியும் துளிகள்...1

        இயந்திரத் தனமான வாழ்க்கையில் எப்போதும் சிறுசிறு இளைப்பாறுதல்கள் கிடைத்துக் கொண்டுதானிருக்கின்றது. அதனைக் கவனிப்பவர்கள் ரசிக்கிறார்கள். பயணங்களைத் தூங்கிக் கழிப்பவர்களும் உண்டு. எக்கனாமிக் டைம்ஸில் குறையும் பங்கு மதிப்பிற்காகத் தொலைப்பவர்களும் உண்டு.சில்லறையின் ஞாபகத்தில் சிதறவிடாத மனங்களும்,சிறு குழந்தையின் சிரிப்பில் சிதறிய கணங்களும் கொண்டவர்களும் உண்டு,எதிர்த் திசையில் பயணிக்கும் மர நிழல்களில் தேங்குபவர்களும் உண்டு.கம்பியில் சாய்ந்து அல்ஜீப்ராவை மனனம் செய்யும் சிறு பெண்ணின் பச்சை ரிப்பனில் பால்யத்தைக் கண்டடைந்தவர்களும் உண்டு.


   ஒவ்வொருவருக்கும் ஏதேனும் ஒரு பாடலை இயற்கை முணுமுணுத்துக் கொண்டுதானிருக்கிறது.அம்மாவின் தாலாட்டாகவோ, தமிழய்யா விளக்கிய ‘கொங்குதேர் வாழ்க்கை’யாகவோ,அப்பா மிதிக்கும் சைக்கிளோசையாகவோ,தட்டச்சு பயிலச் செல்கையில் வீட்டைக் கடக்கும் ஜெயமீனாவின் கொலுசொலி சேர்ந்த செருப்போசையாகவோ அவரவர் அனுபவங்களுக்கேற்ப காதில் ஒலிக்கலாம்.அப்படிக் கடந்த தருணங்களின் சுவை, இப்போது எட்டாத் தேனாய் கனவில் மட்டுமே ருசிக்க முடியும்.

    அப்படியொரு தேனின் சுவை மிச்சங்களை மீட்டெடுக்கும் ஒரு பாடல்தான் இது. ராஜாவின் விரல்வழிக் கசிந்த துளிகள் இசை வெள்ளமாய் மூழ்கடிக்கின்றது.பாண்ட்ஸ் பவுடரை அப்பிய பருவ ம்ங்கையாய் பனிப்புகையினூடே முகம் காட்டும் மலைப்பாதையும், அபாயம் காட்டினும் ஆச்சரியம் கூட்டும் கொண்டை ஊசி வளைவுகளும், ஆளிருக்கும் சமயத்தில் கூட யாவருமறியா வண்ணம் சீண்டிப் போகும் புது மனைவியின் கொஞ்சலை மிஞ்சும் சிறு தூறல் துளிகளும், நம் காலசைவில் வேகம் கூட்டும் வாகனமும் இன்னும் மொழிக்குள்ளும், விழிக்குள்ளும் அடங்காத காட்டு வாசனையும் கூடவே இந்தப் பாடலும்....


    

Thursday, January 14, 2010

புவி ஆராய்தல்...-உரையாடல் கவிதைப் போட்டிக்காக

உலக வரைபடத்தில் கடலுக்கு நீலம்
கூட்டிக் கொண்டிருந்த லச்சுவிடம் கேட்டேன்
என்னை மாதிரி எஞ்சினியராகப் போகிறாயா என
பென்சிலை தாடையில் தட்டி யோசித்துச்
சொன்னாள் பூமி ஆராய்ச்சி பண்ணப் போவதாக
என்னவெல்லாம் செய்வாய் கேட்பது எளிதுதானே
இன்னும் எளிதாகப் பதில் வந்தது
வீடு, காடு,மலை,ஆறு,கடல்,மீனு,கிணறு,
சிங்கம், கரடி,யானை,கிருஷ்ணா,சோறு,நிலா,
வானம்,சூரியன்,பார்பி பொம்மை,டிவி
இன்னும் பலவற்றைக் கையசைவில்
காட்டி ஆராயப் போவதாகச் சொன்னாள்
நிலா,சூரியன் எல்லாம் பூமியில் இல்லையே
பிறகெப்படி பூமியில் வந்தது கர்வக் கேள்வியுதிர்த்தேன்
பென்சிலால் என் தலையில் தட்டியவாறு
உனக்குத் தெரிந்த பூமி அவ்வளவுதான்
சொல்லிவிட்டு ஆராயத் தொடங்கினாள்
அவளது பூமியை...

குறிப்பு: உரையாடல் அமைப்பின் கவிதைப் போட்டிக்காக எழுதப் பட்டது

Saturday, January 2, 2010

ஐம்பதாவது பதிவு...தமிழ்மண விருதுத் தேர்வு...அவதார்...இன்ன பிற...

    சென்ற வருடப் புத்தாண்டு ரெயில் பயணத்திலேயே கழிந்ததால் வருட முதல் நாளே குளிக்க முடியாமல் போய்விட்டது. இவ்வருடம் அவ்வாறு அமையவில்லை.வீட்டிலேயேதான் இருந்தேன். நண்பர்கள் புடைசூழ இரவு சிறப்பு சிக்கன் விருந்து( நாங்களே தயாரித்தது) மற்றும் இதர திரவ சைட் டிஷ்களுடன் கோலாகலமாகப் போனது.சென்ற வருடம் எதுவும் புத்தாண்டு சபதம் போடவில்லை. அதைத் தொடர்வதே சுகமெனப் பட்டதால் இவ்வருடமும் நோ ரெசொல்யூசன். வேறெங்கும் வெளியில் செல்ல வில்லை.தொலைக்காட்சிகளிலேயே விதவிதமான பெயர்களில் அரைகுறை மான்கள்,மயில்கள் ஆடியதையே பார்க்க நேர்ந்துவிட்டது. அதைவிடக் கொடுமை குழந்தைகள் நடனநிகழ்ச்சியில் அவர்கள் தேர்ந்தெடுக்கும் பாடல்களும், அதற்கு அவர்கள் கொடுக்கும் விரக தாப முக,உடலசைவுகளும்தான்.இதையெல்லாம் பார்த்துட்டு ‘தம்பி’ மாதவன் மாதிரித்தான் கத்தினேன். ‘இப்ப என்ன செய்ய?’ முடிப்பதற்குள் தெறித்து வந்தது நண்பர்களின் பதில் ‘*******’

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

     2008ம் ஆண்டு மத்தியில் ஏதோ பொழுதுபோக்காக ஆரம்பித்த பதிவெழுதும் பழக்கம் ஒன்றரை ஆண்டு கடந்தும் அதே நிலையில் இருப்பது மகிழ்வே. எதைப் பதிவெழுதுவது என்று சிந்திப்பதை விட எதை எல்லாம் எழுதக்கூடாது என்று சிந்தித்ததால், வெகு வெகு நாட்களுக்குப் பிறகு இந்த ஐம்பதாவது பதிவு வந்துவிட்டது.அதுக்காக எழுதிய 50 பதிவுகளும் உருப்படியானதா என்றெல்லாம் கேட்கக் கூடாது.எனது அளவுகோல், என்னை ஒரு வாசகன் என்ற நிலையிலேயே பிடித்து வைத்திருப்பதால் இதுவே தொடரட்டும் என விட்டுவிடுகிறேன்.இதுவரை ஊக்கம் தந்து உதவிய அனைவருக்கும் நன்றிகளை இத்தருணத்தில் தந்துவிடுகிறேன்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

   ந்தாண்டு தமிழ்மண விருதுகளுக்குக் கொஞ்சம் போட்டி குறைந்த ‘ஓவியம்/ஒளிப்படம்’ பிரிவுகளுக்கு நான் பரிந்துரை செய்த ‘ரமணர் கோட்டோவியம்’ இடுகை முதல்  கட்ட பதிவர் வாக்கெடுப்பில் தேர்வாகி டாப் டென்னில் வந்துள்ளது. வாக்களித்த அனைவருக்கும் நன்றி.பார்க்காததால் வாக்களிக்காமல் போனவர்களுக்கும் நன்றிகள்.
   இரண்டாவது கட்ட வாக்கெடுப்பிலும் தங்கள் ஜனநாயகக் கடமையைத் தவறாமல் செய்யுமாறு வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.(ஜனநாயகக் கடமையா...அப்படின்னா என்ன என்று கேட்பவர்களின் ப்ளாக் ஹேக் செய்யப் படுவதாக...)அதற்கான விபரங்கள் இங்கே...

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

   நேற்றே போகலாம் எனத் திட்டமிட்டும், ஷோ டைம் சரிவர அமையாததால் இன்றுதான் போக முடிந்தது ‘ அவதார்’ படத்துக்கு. எல்லோரும் முப்பரிமாணத்தில் அனுபவித்துப் பார்க்க, என்னால் ஒரு பரிமாணம் குறைவாகத்தான் பார்க்க முடிந்தது. ஆம். இந்தோரில் எந்த ஒரு தியேட்டரிலும் 3D முறையில் திரையிடவில்லை.எல்லா ‘நவ்விக்களும்’ ‘ஹை,ஹை’ என்று ஹிந்தியில்தான் பேசிக் கொல்கிறார்கள்.கதை முன்பே தெரியுமென்பதால் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. தமிழ், தெலுங்கு ஆக்‌ஷன், செண்டிமெண்டுகளுக்குச் சற்றும் சளைத்ததில்லை இக்கதையும். ஆனால் திரையில் பார்த்த அனுபவம்..பரமசுகம்.இதெல்லாம் நிஜமா இல்லை CG யா...’நவி’க்களாக வருபவர்கள் மனிதர்களா இல்லை அனிமேஷன் ஆ...இப்படிப் பல ’ஆ’க்களால் வாய் பிளந்து கொண்டது எல்லாம் படம் முடிந்து வெளியில் வருகையில்தான். படம் பார்க்கையில் எதுவுமே தோன்றவில்லை.ஒருவித மாயாலோகத்தில் இருப்பது போன்ற உணர்வுதான்.மிஸ் பண்ணிவிடாதீர்கள். தியேட்டரில் மட்டுமே பார்க்கவும்.படம் முடிந்து வருகையில் நண்பன் சொன்னான்,’ செமப் படம்டா. எனக்கே வாலு முளைச்சு சுத்துறமாதிரி ஒரு ஃபீலிங்’ என்று.அடுத்தவன் முடித்து வைத்தான்,’இதென்னமோ நீ புதுசாச் சொல்ற’ என்று.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

  ந்த மாதிரி கண்டது, கழியது எழுதினா அதுக்கு சரவண பவன் மெனுலிஸ்ட்ல இருக்கிற மாதிரி ஏதாச்சும் பேர் வைக்கணுமாமே..அதெல்லாம் இதே ஃப்ளேவர்ல மாசத்துக்கு ஒண்ணு,ரெண்டு  எழுதுறவங்களுக்கு... நாமதான் அடுத்த கண்டது, கழியது 100வது பதிவாத்தான் போடப் போறோம்.2011க்குள்ள ஒரு பேரு சிக்கிடாது. பார்ப்போம்.

  அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...