Wednesday, June 18, 2008

போலி தசாவதாரம்

சரி ரொம்ப நாள் கழிச்சு இந்தோர்ல தமிழ் படம் போடுறாங்கன்னு (போன வருஷம் சிவாஜி போட்டாங்களாம்) தடபுடலா இங்க இருக்கிற நம்ம தங்க தமிழர்களை எல்லாம் பி.வி.ஆர் காம்ப்ளெக்ஸ் கூட்டிட்டி போனா (டிக்கெட் லாம் அவங்க அவங்க பொறுப்புதான்) ,அங்க போனப்புரம்தான் தெரிஞ்சது தசாவதாரம் ஹிந்தில தான் போட்டிருக்காங்களாம்..

சரி.. நமக்கு தெரிஞ்ச 'ஆவோ' ,'ஜாவோ' ஹிந்திய வைச்சுக்கிட்டு அளம்பிரலாம்னு பசங்களை டிக்கெட் எடுக்க அனுப்பிச்சுட்டு ,நான் போஸ்டர் பார்க்க போனேன். (என்னதான் தியேட்டர்ல முழு படமும் பார்க்க போரோம்னாலும் , சுவர் ஒட்டில படம் பார்த்து கதைய அனுமாநிக்கிரதுல தமிழன மிஞ்ச முடியாது..)

பார்த்தா போஸ்டர்ல அசினையும் காணாம்,மல்லிகாவையும் காணாம். வேற நிறைய சாமி படமா இருந்தது..ராமர்,க்ரிஷ்ணர்ந்னு ..சரி அதெல்லாம் நம்ம கமல்தான் அப்படி வேஷம் கட்டிருக்காருன்னு நம்பி.., அடுத்தடுத்த போஸ்டரா பார்த்திட்டிருந்தேன் .

ஒரு வழியா ரெண்டு மூணு இடத்துல மல்லிகா ஷெராவத் படத்தை பார்த்தேன்.. சரி நம்ம கமல் அசினை டம்மி ஆக்கிட்டு ,மல்லிகா அக்காவுக்கு முக்கியத்துவம் குடுத்துட்டாருன்னு நினைச்சுக்கிட்டேன்..

டிக்கெட் எடுக்க போன பசங்க ரொம்ப நேரமா வரலை.. என்ன கொடுமைடா இது ? இங்க தமிழ் படத்துக்கு கூடவா இவ்வளவு கூட்டம்ன்னு நினைச்சுகிட்டிருந்த நேரம் , டிக்கெட் எடுக்க போன நம்ம தங்கங்கள் எல்லாம் கொஞ்சம் சோகமா வந்தானுங்க..

சரி..கமல் படம்ன்றதால இங்கயும் அரங்கம் நிறைஞ்ச்டுச்சி போல நாளைக்கு பார்க்கலாம்ன்னு பசங்களை தேத்த போனேன்..'விடுற மாப்ளை ,தமிழ் படமா இருந்தாலும்,தலைவர் படம் இல்லையா..அதான் ஹவுஸ் புல் ஆயிடுச்சு..புக் பண்ணிட்டு வரலாம்' ன்னு சொல்லி முடிக்கலை..

அதுக்குள்ள அவன் ரெண்டு நல்ல வார்த்தைய எடுத்துவிட்டான் (தனிக்கைகுரியது)

' இது கமலோட தசாவதாரம் இல்ல. கிருஷ்ணரோட தச அவதாரங்கள் ..ஹிந்தி அனிமேஷன் மூவி .இதோட பேரும் தசாவதார். '

வாயில பட்ட ஜிலேபி ,காலில விழுந்த மாதிரி ஆச்சு.

'சரி வாங்கடா , படத்துக்கு வேணாம் ..சும்மா சுத்தி பார்க்கலாம்..ஏகப்பட்ட மல்லிகாவும் ,அசினும் நேராவே பார்க்கலாம்ன்னு ' கூப்ட்டேன்..

'இல்லைடா.. வந்தது வந்திட்டோம் . இதுக்கே டிக்கெட் எடுத்திட்டேன் வாடா படம் பார்க்கலாம்' ன்னான்.

'அடப்பாவி.. கேயாரெஸ் பார்க்க வேண்டிய படமெல்லாம் இந்த சின்ன வயசுல நமக்கு எதுக்கு?' ன்னு சொல்லி நூறு ரூபா போனாலும் பரவாயில்லைன்னு ,ஓடி வந்தாச்சு..

நான் பார்த்த மல்லிகா போஸ்டர் எல்லாம் ஹிந்தி பட போஸ்டர்.

எனக்கு ஒரு டவுட்டு .. எப்படி இந்த மாதிரி படத்தை தயாரா வச்சுட்டு , நம்ம படம் வெளி ஆகுற அதே நாள்ல ,அதே பேர்ல வெளி இட்டாங்க ..? ரூம் போட்டு யோசிக்கிரதுன்னா இதானா..?

தசாவதாரம் போலி அல்ல.. போலி தசாவதாரம் தான் நான் சொல்ல வந்தது ..

(கடைசில பிட்டு படம் பார்க்க போயி ,ரிஷானு போட்ட மசாலா படம் பார்த்த மாதிரி ஆயிடுச்சு)





Tuesday, June 17, 2008

தமிழ் படம் பார்க்க மூளை தேவையா..?

இது தாமதமான பதிவுதான் ..ஆனா ரொம்ப தாமதம் இல்லைன்னு நான் நினைக்கிறேன்.இப்போதான் அந்த கண்றாவி படத்தை பார்க்க வேண்டியதாச்சு. 'யாரடி நீ மோகினி' தான் அது.இது போல அபத்தக்குவியலை சமீபத்தில் நான் பார்த்ததில்லை. பட்டியலிடுகிறேன் அபத்தங்களை..
  1. முதல்ல கம்ப்யுட்டர் நிறுவன ஆள் எடுக்கும் காட்சி. குழு விவாதத்தில தனுஷ் பொருளாதாரத்தை பத்தி பொளந்து கட்டுவாரு தமிழ்லயே..(நல்லவேளை யுவன் பின்னணி இசையால பேச்சை அமுக்கி இருப்பாரு)
  2. எந்த மாங்கா மடையனும் தன் பையன் காதலுக்காக இடம்,பொருள்,ஏவல் தெரியாம இப்படி எல்லார் முன்னாடியும் காதல் பிச்சை கேட்க மாட்டான்.ஆனா மெட்ரோ சிட்டியில வேலை பார்க்கிற ஒரு நடுத்தரக் குடும்பத்து அப்பா(ரகுவரன்) ,இவ்வளவு கேவலமா நயன்தாரா கிட்ட கெஞ்சுவாரு..(இயக்குனர் குழு கதை விவாதத்தில என்னதான் ஆணி புடுங்கிரான்களோ..?)
  3. நயன்தாரா குடும்பத்தை பத்தி நாம தனியா பேச வேண்டியதில்லை . தனுஷ் சொல்லிருவாரு அது ஒரு 'லூசு குடும்பம்' ன்னு ..
  4. தனுஷும்,அப்பா ரகுவரனும் பேசிக்கிற காட்சிகள் ரொம்ப அன்னியோன்னியம் ..(இதை விட 'ம..','ங்..' அப்படின்னு பேசி இருந்தா ரொம்ப எதார்த்தமா இருந்திருக்கும்..ஆமா தனுஷ் வீட்டுல எப்பிடி..?!)
  5. நயனோட கதா பாத்திரம் அருமை..?! தனுஷை காதலிக்கிறாங்களா இல்லை சைட் மட்டும் அடிக்கிறாங்களா இல்லை டெஸ்ட் பண்ணுறாங்களா அட சாமி ஒரு எழவும் புரியல்லை. (இதோட தெலுங்கு மூலம் இவ்வளவு மோசமாவா இருந்தது.? நான் பார்க்கலை . யாராவது பார்த்தவங்க சொல்லுங்க..)
  6. தன் மனைவியா வரப் போகும் நயனை வர்ணிச்சு பாட ,தன்னோட நண்பனை கூப்பிடுவாரு பாருங்க..இதான்யா கற்பனை ..கண்றாவிடா ...(செருப்பை கழட்டி அடிக்கலாம்ன்னு தோனுச்சு..செல்வா வா இப்படில்லாம் கதை பண்ணாரு..?!)
  7. பாம்பு காமெடி(..?)..யோவ் இயக்குனரே இதை பார்த்து உங்க வீட்டு குழந்தை கூட சிரிக்காது..
  8. நயனோட தங்கை தன்னோட காதலை அக்காகிட்ட சொல்லும்போது நயன் கோபப்படுறது கூட அவளோட அறியா வயசு காதலை நினைச்சு இல்லை..தன்னை சைட் அடிச்ச தனுஷை ,தங்கச்சி ரூட் விட்டதால ஏற்பட்ட கோபம்தான் அது..நல்ல அக்கா ,நல்ல தங்கை..
  9. தன்னோட தங்கச்சி சின்ன பொண்ணு ..அதுனால அவளுக்காக அக்காவே முதலிரவு சாங் கற்பனை பண்ணுவாங்க பாருங்க..சூப்பரப்பு..
  10. கடைசி காட்சில தனுஷ்,கார்த்திக்,நயன் மூணு பேரும் தாத்தாகிட்ட மாறி மாறி "நான்தான் தப்பு பண்ணினேன் .என்னை கம்பால அடிங்க.."ன்னு சண்டை போடுறப்போ , 'இந்தப்படத்தை இவ்வளவு நேரம் பார்த்தது என் தப்பு..என்னை முதல்ல கம்பால அடிங்க..'ன்னு என்னை கதற வைச்சிட்டாங்க..
  11. கல்யாண மேடையில கார்த்திக் எப்படி நெளிஞ்சுக்கிட்டு உக்கார்ந்திருப்பாரோ ,அப்படி உக்கார்ந்துதான் இந்த படத்தை பார்த்தேன்..(ஏன் பார்த்தான்னு கேட்கிறீங்களா ..பக்கத்துல என் நண்பன் ஒருத்தன்,தனுஷ் வெறியன் உணர்ச்சிவசப்பட்டு பார்த்துகிட்டிருந்தான் ..இதுல அப்பா செண்டிமெண்ட் சூப்பர்ன்னு டைலாக் வேற..)

சரி படத்துல நல்ல விஷயமே இல்லையான்னு கேட்கிறீங்களா ..எனக்கு பிடிச்ச நல்லவைகள்..

  1. குட்டி பொண்ணு சரண்யா (ஏற்கெனவே ஒ.நா.ஒ.க பாட்டில இருந்தே எனக்கு பிடிக்கும்ன்னு சொல்ல தேவை இல்லை)
  2. தனுஷின் நண்பன் கார்த்திக்
  3. ஆங்காங்கே ஆங்கில வரிகளை தவிர்த்து பார்த்தால் பாடலும்,இசையும்

இப்போ சொல்லுங்க தமிழ் படம் பார்க்க மூளை தேவையா இல்லையா..?(இதுல 'அஞ்சாதே','சந்தோஷ் சுப்பிரமணியம்' படங்கள் சேர்த்தி இல்லை)..

இது என்னோட தமிழ்மண(ன) நுழைவு பதிவு..குறைகளை சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்வேன் வரும் பதிவுகளில்..