Friday, September 4, 2009

மகளின் அற்புத விளக்கு…

என் மூக்குக்கண்ணாடியை

முகம்மறைக்கும் அளவில்

மாட்டியபடி

“நீங்க பூதம் மாதிரி

இருக்கீங்க அப்பா”

என்று வி(ப)யந்தவளின்

விழிகளில் தெரிந்தது

அற்புத விளக்கு…

14 comments:

  1. அண்ணா சின்னதா சொற்களின் சிக்கனத்தோடு அர்த்ததை அடக்கிக் கவிதை அழகா வருது உங்களுக்கு.

    கவிதை - வெளிச்சம்.

    ReplyDelete
  2. ஏ.. பிரமாதம்ப்பா.! அழகு, ரசனை.!

    ReplyDelete
  3. @ஹேமா...
    நன்றி ஹேமா. சன் டி.வி திரைவிமர்சனப் பாணியில் அழகா சொல்லீட்டீங்க...

    @கயல்விழி நடனம்...
    நன்றி கயல்விழி நடனம்...

    @கோபிநாத்...
    நன்றி கோபி...

    @ஆதிமூலகிருஷ்ணன்...
    நன்றி ஆதி சார்.

    ReplyDelete
  4. அற்புத விளக்கு

    அற்புத கவிதை

    :-)

    ReplyDelete
  5. நல்லா இருக்கு சார்.

    ReplyDelete
  6. @கடையம் ஆனந்த்...
    ரசித்தமைக்கு நன்றி ஆனந்த்...

    @அகல்விளக்கு...
    அற்புத விளக்கை ரசிக்கும் அகல்விளக்கு...:-) நன்றி...

    @மண்குதிரை...
    கவிஞரே நன்றி...

    @ரவிஷங்கர்...
    நன்றி சார்...
    //நல்லா இருக்கு சார்.//
    சார் எல்லாம் வேணாம். நீங்க என் பேரைச்சொன்னாலே போதும் சார்.

    ReplyDelete
  7. கலக்கல்ஸ். எனக்கு கவிதைகளில் வரும் தேவதைகளை விட சிறுமிகள் ரொம்ப பிடிக்கும். :)

    ReplyDelete
  8. ரொம்ப அழகு கவிதைங்க.

    --வித்யா

    ReplyDelete
  9. கொண்டாடுகிறீர்கள்
    தமிழ்பறவை குழந்தையை.
    கொண்டாடுகிறது கவிதையும்!

    ReplyDelete
  10. @கார்த்திக்...
    வருகைக்கும்,ரசிப்புக்கும் நன்றி கார்த்திக்.

    @விதூஷ்...
    முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி வித்யா...

    @ராஜாராம்...
    தொடர் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி ராஜாராம்...

    ReplyDelete