Thursday, September 29, 2011

ரொமான்ஸ் டைம் ஓடிக்கோ ஒளிஞ்சிக்கோ


அன்றொருநாள் நீ வீசியெறிந்த புன்னகையில் தவங்கலைந்த கூழாங்கல்லொன்று ஆற்றைச் சீண்டத் தொடங்கியது# I witness

மல்லிகைப் பூக்களை நெருக்கமாகக் கட்டத் தெரியாததால், தலையில் தட்டிய உன் அம்மாவை நம்புகிறேன் நான். தைரியமாகச் சொல்லிவிடு

வெயில்காலங்களில் நீ ஜன்னலை மூடுவதில்லை. காற்றுக்கும் வியர்ப்பதில்லை# நீ ஏசி. நான் உன் ஃபேன்

நான் கோயில்களுக்குச் செல்வது சாமி பார்க்க அல்ல. சிலைகள் பார்க்க மட்டுமே. பின்னொருகாலத்தில் சிலை மட்டுமே பார்க்க ஆரம்பித்தேன்.

முன்பெல்லாம் மணிக்கணக்கிலும் இப்போது மவுனக்கணக்கிலும் பேசிக்கொண்டிருக்கிறோம்#முத்திப்போச்சு

உனது ஓவியமொன்று தூரிகையில் வரைந்து கொடுத்தேன்.அதைத் தடவிப் பார்க்கிறாய்.விரல்களால் மேலெழும்புகிறது இன்னொரு ஓவியம்

மூக்குத்தி அழகாயிருக்குமா கேட்டாய். உனக்கழகு என்றேன்.வளையல் அழகாயிருக்குமா கேட்டாய். உனக்கழகு என்றேன். தாலி என்றாய். நமக்கழகு.நீயே சொல்லிவிட்டாய்#முந்திரிக்கொட்டை

நீ கோலமிடுகையில் கூட புள்ளி வைப்பதை விரும்பவில்லை.அத்தனையையும் கமாவாக மாற்றிக் கொண்டிருக்கிறேன்#வேற வேல

நமது ஆற்றங்கரைச் சந்திப்புகளுக்கு மட்டும் நீ வெட்கத்தையும், நான் தைரியத்தையும் எடுத்துவருவதில்லை.#ச்சே மிஸ்ஸாயிடுச்சு என வருத்தப்படுது பார் குளம்

டிஸ்கி: இடம்பெறும் கவிதைகளும், ஓவியங்களும் பரீட்சார்த்த முயற்சிகளேயன்றி யார் உயிருக்கும் தீங்கு விளைவிப்பதற்கல்ல. புரிதலுக்கு நன்றி....!

2 comments:

  1. மைன்ட் வாய்ச கேட்ச் பண்ணாங்கன்னா தொலைஞ்சிங்க!

    ReplyDelete
  2. ரொம்ப நல்லாயிருக்கு.

    ReplyDelete