Sunday, September 18, 2011

ஞாயிறு போற்றுதும்-18செப்2011

    ஏதாச்சும் படிச்சாலோ, அதைப்பத்தி நினைச்சாலோ விஷூவலா கற்பனை பண்ணா நல்லதுன்னு சொல்வாங்க. அது என் விஷயத்துல தப்பாயிடும் போல இருக்கு. இந்த மாதிரி விஷூவல் கற்பனைலாம் எனக்கு வண்டியோட்டுறப்போ வருது :( #நல்லவேளை பின்னாடிவர்ற வண்டில ஹார்ன் வச்சிருக்கானுங்க

   ட்ராஃபிக் அதிகம் இல்லேன்னாலும், ரெட் லைட் போட்டா நிற்பது என் பழக்கம். ஆனா பின்னாடி உள்ள மகராசங்களுக்குப் பொறுக்கமாட்டேங்குது போல. ஓவர்டேக் பண்ணி, ‘கியா யார்’ நு கிண்டல் பண்ணிட்டுப் போறான்.சமநிலையைக் குலைப்பதற்கென்றே பிறவியெடுத்து வருகிறார்கள் போலும். #

  இன்னைக்கும் அல்சூர் ஏரிதான் பென்சில்ஜாம் நிகழ்வு.ஏகப்பட்ட பேர் வந்திருந்தாங்க. ஒன்றரை மணிநேரம் வரைஞ்சேன்னா, ரெண்டுமணி நேரம் அடுத்தவங்களோட படைப்புகளைப் பார்ப்பதற்கும், என் படைப்புகளைக் காண்பிப்பதற்குமே போய்விட்டது. #exhibitionism??? its important for some time ,for some work


  இன்னைக்குக் கண்ட்ரோல் இல்லாம ரொம்ப லூசாத்தான் வாட்டர்கலர் பண்ணினேன்.(என்னது நான் பண்றது எல்லாமே லூசுத்தனம்தானா?pls mute ur mind voice)..வழக்கம்போல் திருப்தி தரவில்லை. எனினும்,  i feel better with this.


  மதியம் அங்கேயே இன்னொரு நிகழ்வு. ஃபேஸ்புக் ஓவியக்குழுமம் ஒன்று சேர்ந்து பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நானும் இருந்திருக்கலாம். ஆனா கோடி ரூபா கொடுத்தாக்கூட ஞாயிறு மதியத் தூக்கத்தை விடமாட்டேனெனச் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டேன்.’நந்தினி’ யில் ஹைதராபாதி சிக்கன் பிரியாணி. வீட்டுக்கு வந்ததும் ஒரு நெடுந்தூக்கம்.#மனுஷன் கண்டுபிடிச்சதிலேயே உருப்படியான ரெண்டுவிஷயம் பிரியாணி அதுக்கப்புறம் ஸ்வீட் பான்


    என் அப்பார்ட்மெண்ட்ல நான் இருக்கது என்னைத் தவிர யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சிக்கிட்டிருந்தேன் இப்பவரைக்கும்.இரவு உணவை லைட்டா முடிச்சிக்கிடலாம்னு கடைக்குப் போய் தயிர் வாங்கிட்டு வந்தேன். வீட்டைத் திறக்கறதுக்குள்ள, எதிர்வீட்டுல இருக்க ஹிந்தி ஆண்ட்டி கூப்பிட்டாங்க. அங்க வெளியே சீரியல் லைட்லாம் போட்டு, வீடே கோலாகலமா இருந்தது. சுவரில் ‘happy birthday to JASMINE' னு போட்டிருந்தது. அவங்க பொண்ணுக்கு பிறந்தநாளாம். ஸ்வீட் சாப்பிடக் கூப்பிட்டாங்க.கூச்சத்துடன் சென்றேன்.வரும்போது, ஒரு பெரிய ப்ளாஸ்டிக் தட்டில் சிக்கனுடன் சாப்பாடும் கொடுத்து அனுப்பிவிட்டார்கள்.எதிர்பாராத அன்பில் கொஞ்சம் திக்குமுக்காடித்தான் போனேன். எங்கள் ஊரில் நான் வீட்டில் இருக்கும்போது பக்கத்து லாட்ஜ் ஒன்றில் நிரந்தரமாகத் தங்கியிருந்த பேச்சிலர் வாத்தியார்கள் நினைவுக்கு வந்தது. நல்லநாட்களில் பக்கத்துக் கோயிலிலிருந்து பொங்கல் பிரசாதங்கள், எங்கள், அண்டை வீடுகளிலிருந்து சாப்பாடும் அவர்களுக்குப் போகும். அவர்கள் எவ்வளவு ம(நெ)கிழ்ந்திருப்பார்கள் என இன்று எனக்கு நினைவுக்கு வந்தது.(பதிவு கொஞ்சம் ஜாக்கி பதிவு மாதிரிப் போயிடுச்சோ??? ! ) விடுங்க...அன்பால் சுழலும் உலகமிது. திரைகள் மூடி நாகரிகம் காட்டுவதைவிட, வெளிக்கொட்டும் பேச்சுக்கள் எவ்வளவோ மேல்....

No comments:

Post a Comment