Saturday, December 31, 2011

ச்சும்மா ட்ரா

  சித்திரமும் கைப்பழக்கம்....எப்பொழுதாவது வரைவதைவிட தினமும் பயின்றால் நல்லது என எண்ணி www.chummadraw.blogspot.com இல் இணைந்துள்ளேன். தினம் ஒரு வார்த்தை கொடுக்கப்படும். அதற்கேற்ப ஏதாவது வரைய வேண்டும். அம்முயற்சியினால் அடிக்கடி ப்ளாக் அப்டேட்டப் படாது இங்கு. அவ்வப்பொழுது எனக்குப் பிடித்த சில படங்களை இங்கு போடலாமென இருக்கிறேன். மற்றவை உங்கள் விருப்பம்...


Sunday, December 25, 2011

கெம்பேகவுட அருங்காட்சியகம் பெங்களூர் 25122011

வாட்டர்கலர் ஆன் வாட்டர்கலர் பேப்பர்...
ஏற்கெனவே இதே இடத்தின் முன்பகுதியை பால்பாயிண்ட் பென்னால் வரைந்தது குறிப்பிடத்தக்கது ;)

Saturday, December 24, 2011

நந்தி ஹில்ஸ்-பெங்களூரு-241211-படங்கள்

பெங்களூரைத் தாண்டி வெளியிடத்திற்குச் சுற்றலாம் எனக் காற்றில் ஒரு திட்டம் போட்டு வைத்திருந்தேன். உறுதுணையாக தம்பி ரசிகன் மகேஷ் சென்னையிலிருந்து வருவதாகவும் சொல்லியிருந்தார். அவர் வேலை புகைப்படம், என் வேலை ஸ்கெட்சிங்...

எட்டு மணிக்குத் திட்டமிட்ட பயணம் தொடங்க பத்துமணி ஆகிவிட்டது.60 கிமீட்டர்கள். வண்டியிலேயே பயணம். அது ஹில்ஸ்டேஷன் எனக் கேள்விப் பட்டிருந்ததால், ஜெர்கினோடு வேறு பயணம். போகும் வழியில் வியர்த்தபோது, ‘சரி இங்கதான் இப்டி, மலையேறியாச்சுன்னா ரொம்ப உபயோகப்படும்’ என சுய சமாதானம் சொல்லியவாறே தொடர்ந்தோம். ஒயிட்ஃபீல்டிலிருந்து, ஹொஸ்கட்டே, தேவனஹல்லி வழியாக நந்திஹில்ஸ் போவதுதான் எங்கள் வழித்திட்டம். ஸ்டேட் ஹைவேஸ், போக்குவரத்து நெருக்கடி, சிக்னல் எதுவும் இல்லாததால் இனிதாகப் பயணித்தோம்.

8 கிமீட்டருக்கு முன்னதாக மலைப்பாதை ஆரம்பம். எனக்கு சும்மாவே ஹைட்டுன்னா பயம். எப்படி வண்டி ஓட்டப் போகிறேனோ என மனசுக்குள் மாரியாத்தாளைக் கும்பிட்டபடி , தக்கிமுக்கி மலையுச்சி சென்று சேர்ந்தோம்.(4000 மீட்டர் கடற் பரப்புக்கு மேலே). போனா சுள்ளுன்னு அடிக்குதுய்யா வெயிலு...அவ்வ்வ்வ்

அப்படியொன்றும் ஈர்ப்பான இடமாய்ப் படவில்லை எனக்கு. வெயில் வேற கொல்லுது, நான் கற்பனை செய்த காட்சிகள் எதுவும் இல்லை. என்ன சுற்றிப்பார்ப்பது எனத் தெரியாமல் வாழ்க்கையே வெறுத்துப் போனோம். அப்போது எங்களைக் கடந்த ஒருவரிடம், இந்தப் பக்கம் போகிறீர்களே என்ன இருக்கிறது எனக் கேட்டோம்.அவர் சொன்னபதில் சூழலுக்குத் தக்கது, ‘சூஸைட் பாயிண்ட்’.இதுக்கு இவ்வளவு தூரம் மேல வரணுமா?? வீட்டிலேயே ‘மங்காத்தா’ சீடி, இல்ல சாருவோட ப்ளாக் படிச்சாப் போதாதான்னு தோணுச்சு...

பக்கத்துலயே திப்பு லாட்ஜ் இருந்தது. அவர் சம்மர் ல இங்கு வந்து தங்குவாராம்.யோவ் விண்டர்லயே இங்க வேகுது, சம்மர்ல என்ன கிளுகிளுப்புய்யா இருக்கும் உமக்குனு மனசுக்குள்ள திட்டிட்டு உடனே மன்னிப்பும் கேட்டுக்கிட்டேன். அந்த இடத்துல பெரிய அளவுல ,வாழையிலை போன்ற இலைகள் பார்த்தேன். பெயர் தெரியவில்லை.(படம் கீழே)...

இன்னும் மேலே போனா, நந்தி கோயில் இருக்கு. கால்ல மாவை இழுகிட்டுப் போனா, ஒரு நிமிசத்துல தோசையாப் பிச்சு வாயில போட்டுக்கலாம் போல மொட்டப் பாறைல கொட்டிக் கிடக்குது வெயிலு....சரி கடமையைச் செய்வோம்னு வேலையில இறங்கிட்டேன்...

வாட்டர்கலரில் இருக்கும் பூக்கள் வழியில் பார்த்தவை. பெயர் தெரியவில்லை என ‘நிம்மி’, ‘ஜிம்மி’ எனப் பெயரிட்டு ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தேன். நண்பர் ஒருவர் அது ‘ஸ்லீப்பிங் ஹைபிஸ்கஸ்’ எனச் சொன்னார். சரி நம்ம சாதிதான் போலன்னு நினைச்சுக்கிட்டேன்...


வாழையிலையை வாட்டர்கலரில் வரைய நினைத்து மொக்கையாகிவிட்டது. ‘pen' புத்தி பின் புத்தி என்பதுபோல பின், பென்னால் சரிசெய்ய முயற்சித்தேன்.


இந்த சிலைகள், நந்தி கோயிலுக்குள் இருக்கும் துணை தெய்வங்கள்...(நல்ல வேளை ஜெயமோகன் கண்ணுல படல. பட்டா, ‘சூடு’ன்னு 5000 பக்கம் நாவல் எழுதிருப்பாரு.)பால்பென்னில் வரைந்தது....

Sunday, December 18, 2011

சிலையும் கலையும் -பெங்களூர்-18டிசம்பர்2011

நேற்றிரவு சமகாலட்விட்டர்களான டிபிசிடி(டிபிகேடி),பாலா, சமூகம் (எ) சண்முகம் ஆகியோரும், சங்ககால ட்விட்டர்களான புருனோ மற்றும் அடியேனாகிய நானும் ஒயிட்ஃபீல்டிலுள்ள எனது வீட்டில் கூடி சமூகப் பிரச்சினைகளை ஆய்ந்தணுகினோம். பின்நவீனத்துவத்தில் ஆரம்பித்துப் பல விஷயங்களைப் பிய்த்துப் பிராண்டினோம்.நல்லதொரு சந்திப்பு. கார்த்திக் அருள் மற்றும் முகம்மது கஃபில் இல்லாதது மட்டுமே குறை.

இரவு தொடர்ந்து, காலை வரை ஒவ்வொருவராகப் பறவையின் கூட்டிலிருந்து விடைபெற்றுச் சென்றனர்.

காலையில் கப்பன் பார்க்கிற்கு அருகிலுள்ள அரசு அருங்காட்சியகத்திற்குச் சென்றிருந்தேன். இன்று பென்சில் ஜாம் அங்கேதான். பெங்களூர் வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆனாலும் இன்னும் கப்பன் பார்க் சென்றதில்லை. இன்று அதன் அருகில் சென்றும் உள்ளேசெல்லவில்லை. அருங்காட்சியகத்தில் என்ன இருக்கும்?
பழைய போர்க்கருவிகள், உடைந்த பானைகள், சிலைகள்(தலையுடனும், தலையில்லாமலும்) இன்னும் பண்டைய பொருட்கள்...

போய் வந்ததின் நினைவாகச் சில ஓவியங்கள்...
முதலாவது...
வித்தியாசமாகத் தென்பட்ட பண்டையப் போர்க்கருவிகள்.. பிட் பென், வாட்டர்கலர் இன் வாட்டர்கலர் பேப்பர்...




இரண்டாவது ஒரு சிலை....பிட் பென் இன் வாட்டர்கலர் பேப்பர்...




மூன்றாவது வெளியே கேண்டீனில் டீ சாப்பிட அமர்ந்தபோது திடிரென வரைய ஆரம்பித்தது. கொஞ்சம் சப்பையாத்தான் இருக்கும்.அதிகத் திட்டமிடல் இல்லாத காரணத்தால்...வாட்டர்கலர் இன் வாட்டர்கலர் பேப்பர்...



சிலைகளை வரைவது மிகக் கடினமாக இருந்தது. அடுத்தவாரம் நந்திமலை சென்றுவரலாமென ஒரு எண்ணம்.

Sunday, December 11, 2011

சொந்தக் கதை சோகக் கதை 111211

ஷ்ஷப்பா....

இந்த வீக் எண்டு பெண்டை நிமிர்த்திருச்சு. ஜெர்மன் ட்ரிப் முடிஞ்சு போன வாரம் ஊருக்குப் போயிட்டு வந்ததால ஏகப்பட்ட வேலை பெண்டிங்.நேத்தும் இன்னைக்கும் ஒரு வழியா ஓரளவுக்கு முடிச்சு வச்சேன்.

*வண்டி இன்சுரன்ஸ் ரெனுவல்(சொல்ல மறந்துட்டேன் வண்டி எடுத்து ஒரு வருஷம் ஆச்சு. நேத்து அதுக்கு ரெண்டாவது பிறந்தநாள். சர்வீஸ் முடிஞ்சதும் நேரா பெட்ரோல் பேக்கரி போய் 5 லிட்டர் பெட்ரோல் ஊட்டிவிட்டேன்)
*வண்டி சர்வீஸ்
*துணியெல்லாம் துவைக்கக் கொடுத்தாச்சு
*சாக்ஸ் தொவைச்சாச்சு(30 செட்டு)(ஒரு மாசத்துக்குக் கவலையில்லை)
காயப் போட்டாச்சு.(காயவைக்கிற இடம் ?? இருக்கவே இருக்கு டிராயிங் போர்டுதான்)
*இன்னைக்கு பென்சில் ஜாம் செஸ்ஸன் அட்டெண்ட் பண்ணியாச்சு(ரொம்ப நாளைக்கப்புறம் பிரஷைத் தொட்டேன்)
*ரூம் கிளீனிங்(80% ஓவர்)
*நைட் சிக்கன் சமையல்

வீக் எண்ட்ல மதியம் தூங்குறதைக் கஷ்டப்பட்டு தியாகம் பண்ணிட்டா ஏகப்பட்ட வேலை செய்யலாம்...
நாளைக்கு ஆஃபீஸ் போறதுக்குக் கூட எல்லாம் ரெடி. ஷர்ட் அயர்ன் பண்ணியதை வாங்கி ஹேங்கரில் தொங்கவிட்டாச்சு. பேண்ட்ல பெல்ட் உட்பட எல்லாம் போட்டு செட் பண்ணியாச்சு. சாக்ஸை ஷூ மேல வச்சாச்சு. ஆனா ஒரே ஒரு முக்கிய வேலை அதுதான் பிரச்சினையும் கூட. நாளைக்கு அட்லீஸ்ட் ௮ மணிக்காவது எந்திருக்கணும்...

ரூம் க்ளின் பண்ணதுல முக்கியமான விஷயம், இனிமேதான் கமிட்மெண்ட்ஸூக்கெல்லாம் படம் வரைஞ்சு கொடுக்கணும்,,, பஸ்ல வராட்டி இன்னும் கொஞ்ச நேரம் மிச்சமாகும்...

இந்தக் கதையெல்லாம் சொல்ல ஒரு போஸ்ட்டான்னு கேக்கக் கூடாது. சரி விஷயத்துக்கு வர்றேன். இன்னைக்கு பென்சில் ஜாம், அல்சூர் ஏரி தான். கடந்த ஆறுமாசத்துல இது மூணாவது தடவை. ஏற்கெனவே ஒருதடவை பண்ணி எனக்குப் பிடிக்காத ஒரு வியூவை இன்னைக்கு மறுபடியும் பண்ணேன். பெட்டர். ஆனால் இன்னும் பிடிக்கலை. :(

இருந்தாலும் உங்கள் பார்வைக்கு...அல்சூர் ஏரி...

நம்ம பதிவுகள்ல மக்களுக்குத் தேவையான விஷயம் இல்லைன்னு பலபேர் சொல்லக் கேள்வி...அதான் ஒரு கருத்து சொல்லிட்டுப் போகலாம்னு....மன்னிச்சூ....

“பொய்யை ஒத்துக்கிட்டவனின் கஷ்டம், அடுத்து அவன் உண்மையே பேசும்போதுதான் தெரியவரும்”

Tuesday, December 6, 2011

ஜெர்’மென்’ அண்ட் ’விமன்’



காலை, மாலை இரு வேளைகளிலும் மெட்ரோ ரெயிலில் அரைமணிநேரப் பயணம் அலுவலகத்திற்கு. அப்போது கிறுக்கியது. படங்களைப் பார்த்தாலே ஜெர்மானியர்களின் கேரக்டர்கள் புரிந்திருக்கும். வெட்டிப் பேச்சு கிடையாது. ரயிலுக்குக் காத்திருப்பதிலிருந்து, ஏறி, அமர்ந்து, நின்று, இறங்கும்வரை கையி
ல் ஏதாவது ஒரு புத்தகம்(ஜெர்மன் மொழியில்தான்) அல்லது ஸ்மார்ட் ஃபோனில் பிரவுசிங் அல்லது கேமிங்...

அவர்களின் செயல்களை சிம்பிளாக வரைய நினைத்துப் பின் அவர்களின் முக வேறுபாடுகளில் கவனம் செலுத்திவிட்டேன். சிறு சிறு கோடுகளாக இணைக்காமல், பெரிய பெரிய ஸ்ட்ரோக்குகள் வரையச் செய்த முயற்சிகள் இவை.பார்த்தமைக்கும், ரசித்தமைக்கும் நன்றிகள்...!






















நாளிதழ்களில் வருவது போல் ஒரு ஃப்ளாஷ் நியூஸ்,,,, இதே படங்களை ஃபேஸ்புக்கில் ஷேர் செய்திருந்தேன். இண்டர்நேசனல் ஃபேமஸ் வாட்டர்கலரிஸ்ட் டெரைன் அவர்களின் லைக்கும், கமெண்ட்டும் கீழே...
சில விஷயங்கள் சிலருக்கு சாதாரணமாகவும், சிலருக்கு வெகு அசாதாரணமாகவும் தோன்றலாம். எனக்கு இது இரண்டாவது வகை. ஒரு சின்ன லைக் எவ்வளவோ செய்யச் சொல்லும். நன்றிகள் அனைவருக்கும்...!