Saturday, May 30, 2009

லேசர்

நெல்லிக்காய் மூட்டை போல்
நித்தம் சிதறும்
என் பொய்களில்
ஒன்றேனும் தூண்டலாம்
அடுத்த(வர்) மூட்டையை...

27 comments:

  1. நெல்லிக்காய் மூட்டை போல்
    நித்தம் சிதறும்
    என் பொய்களில்
    ஒன்றேனும் தூண்டலாம்

    இதுவரை வரிகள் சுருக்கமா ஏதோ ஒரு எதிற்பார்பை நோக்கிச் செல்ல வைக்கின்றது ஆனால்

    அடுத்த(வர்) மூட்டையை...

    இது எனக்குப் புரியவில்லை.

    மூட்டையை எதுவாக யோசித்தும் எனக்ககு எட்ட வில்லை.

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி முத்துராமலிங்கம்...
    கவிதையில முதல் வரியில ஒரு மூட்டை போட்டிருக்கேன்ல.. அதுதான் இது. ஆனா அடுத்தவனோட மூட்டை.
    ஒவ்வொருத்தனுக்குள்ளயும் ஒவ்வொரு மூட்டை(மினிமம்) இருக்கும்.நிறையப் பேரு அத அவுத்து விட வேணாம்ன்னு நினைச்சாலும், அடுத்த பொய் வந்து அவுத்து விட்டுரும்.. தலைப்பு கூட ‘லேசர்’ன்னு வச்சேன். ஒரே தத்துவம்ன்றதால...இது என் மேனேஜருக்கும், எனக்கும் இடையில் ஏற்பட்ட நிகழ்வின் வெளிப்பாடு...
    புரிய வைக்க முடியாமல் கவிதை புனைந்ததற்கு மன்னிக்கவும்.. அடுத்த கவிதையில்(அடுத்ததா.. என அதிர்வோரும் மன்னிக்க) திருத்திக் கொள்கிறேன்...

    ReplyDelete
  3. என் பொய்களில்
    ஒன்றேனும் தூண்டலாம்
    வரிகள் சுருக்கம்

    ReplyDelete
  4. முதல் வருகைக்கு நன்றி கவிக்கிழவரே...
    //என் பொய்களில்
    ஒன்றேனும் தூண்டலாம்
    வரிகள் சுருக்கம்//
    அதோடயே முடிச்சிருக்கலாமோ.?!

    ReplyDelete
  5. கொஞ்சம் புரிவது கடினமாகத் தான் இருக்கு. உங்கள் தனிப்பட்ட அனுபவம் என்று வேறு சொல்கிறீர்கள். புரிதும் புரியாமல் எழுதுவதால் நீங்க கவிஞர் ஆகி விட்டீர்கள் என்றுதான் சொல்ல வேண்டும் :)

    அதட்டல் இல்லாத வார்த்தைகள் - ஒரு பளீர் சித்திரம் என்று எழுதும் திறமை உங்களுக்கு இருக்கு என்று நினைக்கிறேன். முகுந்த் நாகராஜ் கவிதைகள் அந்த ரகம். எழுத எழுத தான் பண்படும். நிறைய பேரின் கவிதைகள் படியுங்கள். உங்களை அறியாமலே உங்களுக்கு ஒரு தனிப் பாணி வந்துவிடும். இப்படி மேதாவித்தனமாக நான் எழுதுவது எனக்குப் பிடிக்கவில்லை என்றாலும்...நீங்க தானே உண்மையை எழுதச் சொன்னது :)

    அனுஜன்யா

    ReplyDelete
  6. நித்தம் வரும் பொய்கள்

    நல்ல கவிதை நண்பரே

    ReplyDelete
  7. @அனுஜன்யா...
    இது போன்ற அப்பட்டமான விமர்சனங்கள்தான் தேவை சார். அதனால்தான் எழுதியவரை கவிதையைப் பதிப்பித்து விட்டேன்.இதில் சொல்லப் படும் மூட்டைக்குள் பொய் மட்டுமல்ல கவிதை,சில உணர்வுகள் எனக்கூட வைத்துக்கொள்ளலாம் அவரவர் அனுபவத்திற்கேற்ப..அதனைச் சரிவரச் சொல்லி இருக்கலாம்தான். சரி.. கவிதை என்றால் சொற்சிக்கனம் தேவையென்றெண்ணி, சற்றுக் கஞ்சனாகிவிட்டேன் போல...
    முகுந்த் நாகராஜன் கேள்விப்பட்டிருக்கிறேன். படித்ததில்லை.படிக்க வேண்டும். ஒவ்வொருவர் கவிதையைப் படித்தவுடன் அவரவர் பாணியில்தான் சொற்கள் சேர்கின்றது..ஆனால் எனக்கு மிக விருப்பம் ராஜா சந்திரசேகர் கவிதைகள்தான்...க்யூட்...தங்களின் கருத்து எனக்கு மிக உற்சாகமளிக்கிறது மென்மேலும் எழுத... நன்றி அனுஜன்யா... அடுத்த கொலைவெறியில் உங்களைச் சந்திக்கிறேன்...

    ReplyDelete
  8. @நட்புடன் ஜமால்...
    பகிர்வுக்கு நன்றி பின்னூட்ட சுனாமியே...

    @கார்க்கி....

    சகா... அருமையா எஸ்கேப்பாகிட்டீங்க,தலைப்பை மட்டும் விமர்சித்துவிட்டு...உங்க சென்னை நம்பர் என்னிடம் இல்லை...

    ReplyDelete
  9. ஏற்கனவே பின்னூட்டத்துல முத்துராமலிங்கம், அனுஜன்யா சொல்லிட்டதாலயும்..(?!) கவிதைக்கு அர்த்தத்தை நல்லவேளையா படிச்சுட்டதாலயும் தைரியமா சொல்ல முடியுது..

    கவிதை நல்லா இருக்குங்க :-)

    ReplyDelete
  10. முதல் வருகைக்கு நன்றி சென்ஷி...
    ஆமா.. நீங்க பாராட்டுறீங்களா இல்ல ஓட்டுறீங்களா...?!

    ReplyDelete
  11. எனக்கு கூட அர்த்தம் புரியவில்லை.யோசித்து விட்டுதான்
    மற்ற பின்னூட்டங்கள் பார்த்தேன்.
    புரிந்தது.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. நீங்கள் ஒரு கவிஞர் ஆகிவிட்டீர்கள்... (வேறென்ன, நமக்கும் புரியலை...)

    சரி பின்னூட்டத்தைப் பார்த்தாச்சும் தெரியலாம்னு வந்தேன். அப்பவும் இந்த மரமண்டைக்கு ஏறலை

    ReplyDelete
  13. @ஆதவா...
    வருகைக்கு நன்றி...உங்களுக்கே புரியலைன்னுட்டங்க...சரி.சரி...
    அடுத்ததில் புரியும்படி எழுதுகிறேன்...

    @ரவிஷங்கர்..
    வாங்க சார்...
    வாழ்த்துக்கு நன்றி...புரிஞ்சிருச்சா சார்.. ஓ.கே..

    ReplyDelete
  14. அண்ணா! தலைப்பு டாப்பு

    ReplyDelete
  15. அன்பு தமிழ்ப்பறவை...

    என்னத்த சொல்ல..? பெரியவங்க எல்லாம் சொல்லிட்டதால எஸ்கேப்.!

    ReplyDelete
  16. வாங்க வசந்த் ந்னு சொல்றதுக்குள்ள எஸ்கேப்பா...?
    நடக்கட்டும்...

    ReplyDelete
  17. நெல்லிக்காய் மூட்டை போல்நித்தம் சிதறும்என் பொய்களில்ஒன்றேனும் தூண்டலாம்அடுத்த(வர்) மூட்டையை..

    அய்யோ

    என்னங்க இது

    ஒன்னுமே புரியலை

    ReplyDelete
  18. என்னை விட பெரிய பெரிய ஆளுங்க
    எல்லாரும்
    எஸ்கேப்பா இது
    என்ன கொடுமை????

    கலக்கல் தமிழ்

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. ரசித்தேன்..

    என்ன கூத்து இது.? எனக்கு முதலிலேயே புரிந்துவிட்டது. ஆனால் அனுஜன்யா, ரவிஷங்கர் போன்றோருக்கு முதலில் புரியலையாமே.. நாந்தான் தப்பா கிப்பா ஏதும் புரிஞ்சு வச்சிருக்கேனோ தெரியலையே.. ஆனால் கவிதைக்கும், தலைப்புக்கும்தான் என்ன தொடர்புன்னு புரியலை.

    ஆமா, இன்னொரு சந்தேகம். நாங்கெல்லாம் முக்கிமுக்கி 500 வார்த்தைகளில் பதிவெழுதினால், 10 வார்த்தைகளில் எழுதி பேர் வாங்கணும்னு நினைக்கிறது கொஞ்சம் ஓவராயில்லை.. நா பொதுவா எல்லா கவிஞர்களையும் பாத்துதான் கேக்கிறேன்.

    ReplyDelete
  20. @சக்தி...
    வலைச்சர வாத்தியாரம்மாவின் வருகைக்கு நன்றி...
    //எஸ்கேப்பா இது
    என்ன கொடுமை????

    கலக்கல் தமிழ்

    வாழ்த்துக்கள்//
    கவிதை(..?) புரியலைன்னாலும் கூட வாழ்த்தியிருக்கீங்க... நன்றி சக்தி...



    @ஆதிமூலகிருஷ்ணன்...

    கவிதை புரிந்தவரைக்கும் கிரடிட் எனக்கு. வருகைக்கும், புரிதலுக்கும் நன்றி.. ஆனால் தலைப்பு புரியலைன்றீங்களே...’லேசர்’ செயல்பாட்டுல(ரூபி லேசர்ன்னு ஞாபகம்), கிளர்ந்திருக்கும் அணு, இடை நிலையிலிருக்கும் இன்னொரு அணுவைத் தூண்டி அதையும் கிளர்ச்சி நிலைக்கு உயர்த்தும் எனப் படித்ததாக ஞாபகம்... அதுபோல் வெளியான பொய்களில் ஒன்றாவது, வெளிவராமல் இயல்புநிலை வார்த்தைகளுக்குள் ஒளிந்திருக்கும் பொய்யைத்தூண்டிவிடும்.. பின் அது அடுத்ததை, அது அடுத்ததை... எனத் தொடர்வினை...

    //முக்கிமுக்கி 500 வார்த்தைகளில் பதிவெழுதினால், 10 வார்த்தைகளில் எழுதி பேர் வாங்கணும்னு நினைக்கிறது கொஞ்சம் ஓவராயில்லை.//
    இந்த கம்பெனி சீக்ரட்டால தான் என்னால இப்போ மாதத்துக்கு 5 பதிவு போடமுடியுது..இதெல்லாமா வெளிப்படையாப் போட்டு உடைக்கிறது...

    ReplyDelete
  21. அழகாய் இருக்கிறது..
    அடைப்புக் குறியை எடுத்தாலும்.. அதனுள்ள எழுத்துகளை எடுத்தாலும்..
    வானம் வசப்பட்டும் கொஞ்சம் 'லேசர்' வசப்படாதிருந்தது..
    நல்லவேளை, முந்தைய கருத்துரையில் உரைத்தீர்கள்!!
    (இயற்பியலும் இயல்பியலும் ?! )
    அப்புறம்...வலைப்பக்கம் வந்ததற்கும் வரிசையான பின்னூட்டத்திற்கும் நன்றி!!
    (நண்பர் சேரலுக்கு்ம்:)

    ReplyDelete
  22. அருமையான வரிகள்..
    கவிதைலயும் கலக்குறீங்க.:)

    ReplyDelete
  23. வருகைக்கு நன்றி தர்ஷினி...
    கவிதைய ஆளுக்காள் கலக்கி ஏற்கனவே கலங்கிப் போய்தான் இருக்கு. இதுல நான் வேற...

    ReplyDelete
  24. சிறு பொறிக்கவிதை அருமை.

    ReplyDelete