Sunday, October 10, 2010

தேவதை கண்டவள்


தூங்கி எழுந்தவள் கேட்டாள்
அப்பா தேவதைக்கு
கால் இருக்குமா
இல்லை என்றேன்
இறக்கை,தங்கமுடி,
சின்னக் க்ரீடம்
இன்னபிறவும் இருக்குமா கேட்டாள்
ஆம் என்றேன்
கனவுல வந்த தேவதை
கண்ணாடியும் போட்டிருந்துச்சுப்பா
என்றாள்...
சிரித்துக் கொண்டே சரிசெய்தேன்
என் மூக்குக் கண்ணாடியை...

   நன்றி: மாடல்: திவ்யா...
புகைப்பட உதவி:மகேஷ்...

14 comments:

  1. அருமை! இனிமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. வணக்கம்

    தேவதை கனவில்
    தேவதை.............

    ReplyDelete
  3. அண்ணா ...குழந்தை கனவு காண்றவரைக்கும் உங்க கனவு வந்தாச்சா !

    கவிதை அழகு இயல்பு !

    ReplyDelete
  4. போட்டோ நல்லா இருக்கு.கவிதை ஓகே. ஒரு மாசமா எனக்கு கவிதை
    /கதை ஒண்ணும் தோண மாட்டேங்குது.
    என்னனோ மாதிரி இருக்கு.

    ReplyDelete
  5. @ எஸ்.கே...
    நன்றி நண்பரே...வருகைக்கும், வாழ்த்துக்கும்

    @தினேஷ்குமார்....
    நன்றி தினேஷ்...நீங்க உங்க தேவதையோட வந்திருக்கீங்க :-)

    ReplyDelete
  6. @ஹேமா...
    வாங்கோ ஹேமா...:-) கனவுகளுக்குக் கட்டுப்பாடு, காலமுண்டோ...உங்களுக்குத் தெரியாததல்ல...

    @மகேஷ்....
    நன்றி மகேஷ்...

    @கே.ரவிஷங்கர்...
    நன்றி சார்...ஃபோட்டோ மகேஷ் எடுத்தது.
    ஃபோட்டோ பாத்ததும் தோணியது கவிதை. :-)
    //ஒரு மாசமா எனக்கு கவிதை
    /கதை ஒண்ணும் தோண மாட்டேங்குது.
    என்னனோ மாதிரி இருக்//
    நீங்களே இப்படிச் சொன்னா???ராஜா பதிவு போடுங்க... அந்த நேரத்துல நல்ல நாட் கிடைக்கலாம்...:-)

    ReplyDelete
  7. இது ரொம்ப அழகு. இன்னும் பெட்டரா பண்ணியிருக்கலாம்.

    ReplyDelete
  8. kavithai super+ model Divya very very super.

    www.vijisvegkitchen.blogspot.com

    ReplyDelete
  9. தேவதை ஆனா பெண்ணை என்று கேட்டதா குழந்தை? :))
    நல்லா இருக்குங்க

    ReplyDelete
  10. @ஆதிமூலகிருஷ்ணன்...
    நன்றி ஆதி... முதல் முறை தோன்றுவதை அப்படியே பதிவிட்டுவிட்டேன். அடுத்ததில் முயற்சிக்கிறேன்.

    @கார்த்திக்...
    நன்றி கார்த்தி. உனக்குப் பிடிக்கும்னு தெரியும்...

    ReplyDelete
  11. சே.குமார்...
    நன்றி நண்பரே...வருகைக்கும், வாழ்த்துக்கும்....

    @பத்மா...
    நன்றி பத்மா முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும்,,,

    @viji......
    நன்றி viji முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும்,,,

    ReplyDelete