Thursday, October 7, 2010

கிணற்றுத் தவளை

கும்மிருளாய்க் கருநீர்
வழுவழுப்புக் கற்கள்
பாசியோடிய படிகள்
துருவேறிய வாளிகள்
உடைந்த பால்பாட்டில்
பிளாஸ்டிக் மிச்சங்கள்
இங்கென்ன இருக்கிறது வாழ
மழைநாள் மயக்கத்தில்
சொன்னது மூத்த தவளை
குறுக்குவெட்டோடு
குத்திய கண்களோடு
செத்திருந்தது
ஆய்வகத் தவளை

14 comments:

  1. அது அது வாழ அதன் அதன் சொந்த இடங்களும் பிடித்த வாழ்வுமே வசப்படும் !

    ReplyDelete
  2. நல்ல கவிதை எழுதி அதை மொக்கை என்று லேபிளிடும் உம்மை என்னவென்று சொல்வது?

    ReplyDelete
  3. சிந்திக்க வைத்த கவிதை! கூழோ கஞ்சியோ சொந்த ஊருலே இருக்கணும்னு எங்க பாட்டி சொல்லும்.... ரொம்ப சரி!!!!

    ReplyDelete
  4. நல்லா இருக்குங்க தமிழ்பறவை.

    ReplyDelete
  5. கொன்னூட்டீங்க நண்பரே :))
    தம்மடிக்க கூப்பிட்டா வராத பரணி,
    அடுத்த முறை கிங்ஸ் பற்றவைக்கும் போது தீக்குச்சி புஸ்க் ஆகட்டும்!

    ReplyDelete
  6. @ஹேமா...
    நன்றி ஹேமா கருத்திற்கு...

    @கயல்விழிநடனம்...
    நன்றி கயல்...
    //நல்ல கவிதை எழுதி அதை மொக்கை என்று லேபிளிடும் உம்மை என்னவென்று சொல்வது?//
    வேறெப்படி சொல்வது ‘மொக்கை’தான் :-)

    ReplyDelete
  7. @சிவா...
    நன்றி சிவா... ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்...:-)

    @முத்துலட்சுமி...
    நன்றி முத்துலட்சுமி அம்மா...முதல்வருகைக்கும், வாழ்த்திற்கும்,,,

    @ஜெகநாதன்...

    நண்பரே மன்னிக்கவும்...இத்தனை நாள் இல்லாமல் நீங்கள் அழைக்கையில் இப்படி’வேலைப்பளு’ வந்துவிட்டது...
    அடுத்த வாரம் கண்டிப்பாக நமது சந்திப்பு உண்டு...

    //கொன்னூட்டீங்க நண்பரே :))//
    கவிதையைக் கொன்னுட்டென்னு சொல்றீங்களா? அடுத்த முறை திருத்திக் கொள்கிறேன்...

    ReplyDelete
  8. தமிழ்மணம் மற்றும் தமிழிஷில் ஓட்டளித்த பெயரறியா ந்ண்பர்களுக்கு நன்றிகள்...

    ReplyDelete
  9. சிந்திக்க வைத்த கவிதை!

    ReplyDelete
  10. @மகேஷ்...
    நன்றி மகேஷ்...

    @சே.குமார்...
    நன்றி நண்பரே...

    @கே.ரவிஷங்கர்...
    நன்றி சார்...

    ReplyDelete
  11. நன்றி ஆதி... தாமதமாக வந்தாலும் ஓகே சொன்னதற்கு...:)

    ReplyDelete