Showing posts with label தேசியவிருது. Show all posts
Showing posts with label தேசியவிருது. Show all posts

Friday, May 27, 2011

தேசிய விருது பெற்ற திரைச்சீலை ‘ஜீவா சார்’

   2010 ஆம் ஆண்டுக்கான , திரைப்பட ஆய்வு குறித்த தேசியவிருது பெற்ற ஜீவாநந்தன் சாரை வாழ்த்துகிறேன்...
  முகப்புத்தகத்தில் தான் நண்பராக அறிமுகமானார். இளையராஜாவின் இசையில் இன்னும் நெருக்கமானோம்...
   இவர் திரைப்படங்களுக்கு பேனர் வரைவதைத் தொழிலாக வைத்திருந்தாலும், வக்கீல் படித்தவர்...இந்திய, உலகப் படங்களைப் பற்றி விமர்சனங்கள் எழுதியிருக்கிறார்.(நான் படித்ததில்லை. படிக்கவேண்டும்.)
   எனினும் எனது அனைத்து கிறுக்கல்களுக்கும் அவர் போடும் ‘லைக்’ ஒரு தனிக் கிறக்கத்தை என்னுள் ஏற்படுத்தி, என்னை ஊக்குவிக்கும்....

சமீபத்திய வருத்தம், கடந்தமாதம் கோவை சென்றிருந்தும், ஒரு இனம்புரியாத தயக்கத்தால், அவரைப் பார்க்காமல் வந்து விட்டேன் . வருத்தம்தான்...
   வாராவாரம், குழ்ந்தைகளுக்கு, இன்னும் சில ஓவியர்களுடன் சேர்ந்து ஓவிய வகுப்புகள் நடத்திவருகிறார்...
   மென்மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள்...
சார்க்கோலில் கார்ட்ரிட்ஜ் பேப்பரில் வரைந்த ஒரு அவசர ஓவியம்....