Sunday, December 18, 2011

சிலையும் கலையும் -பெங்களூர்-18டிசம்பர்2011

நேற்றிரவு சமகாலட்விட்டர்களான டிபிசிடி(டிபிகேடி),பாலா, சமூகம் (எ) சண்முகம் ஆகியோரும், சங்ககால ட்விட்டர்களான புருனோ மற்றும் அடியேனாகிய நானும் ஒயிட்ஃபீல்டிலுள்ள எனது வீட்டில் கூடி சமூகப் பிரச்சினைகளை ஆய்ந்தணுகினோம். பின்நவீனத்துவத்தில் ஆரம்பித்துப் பல விஷயங்களைப் பிய்த்துப் பிராண்டினோம்.நல்லதொரு சந்திப்பு. கார்த்திக் அருள் மற்றும் முகம்மது கஃபில் இல்லாதது மட்டுமே குறை.

இரவு தொடர்ந்து, காலை வரை ஒவ்வொருவராகப் பறவையின் கூட்டிலிருந்து விடைபெற்றுச் சென்றனர்.

காலையில் கப்பன் பார்க்கிற்கு அருகிலுள்ள அரசு அருங்காட்சியகத்திற்குச் சென்றிருந்தேன். இன்று பென்சில் ஜாம் அங்கேதான். பெங்களூர் வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆனாலும் இன்னும் கப்பன் பார்க் சென்றதில்லை. இன்று அதன் அருகில் சென்றும் உள்ளேசெல்லவில்லை. அருங்காட்சியகத்தில் என்ன இருக்கும்?
பழைய போர்க்கருவிகள், உடைந்த பானைகள், சிலைகள்(தலையுடனும், தலையில்லாமலும்) இன்னும் பண்டைய பொருட்கள்...

போய் வந்ததின் நினைவாகச் சில ஓவியங்கள்...
முதலாவது...
வித்தியாசமாகத் தென்பட்ட பண்டையப் போர்க்கருவிகள்.. பிட் பென், வாட்டர்கலர் இன் வாட்டர்கலர் பேப்பர்...




இரண்டாவது ஒரு சிலை....பிட் பென் இன் வாட்டர்கலர் பேப்பர்...




மூன்றாவது வெளியே கேண்டீனில் டீ சாப்பிட அமர்ந்தபோது திடிரென வரைய ஆரம்பித்தது. கொஞ்சம் சப்பையாத்தான் இருக்கும்.அதிகத் திட்டமிடல் இல்லாத காரணத்தால்...வாட்டர்கலர் இன் வாட்டர்கலர் பேப்பர்...



சிலைகளை வரைவது மிகக் கடினமாக இருந்தது. அடுத்தவாரம் நந்திமலை சென்றுவரலாமென ஒரு எண்ணம்.

1 comment: