Showing posts with label பிறந்தநாள். Show all posts
Showing posts with label பிறந்தநாள். Show all posts

Wednesday, June 1, 2011

இசையென்னும் தவம்-இளையராஜா-டாப் டென் -வாழ்த்து-பென்சில்

   ஜூன் இரண்டாம் நாள் பிறந்தநாள் காணும் இசைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இன்னும் நிறைய நிறைய எதிர்பார்க்கிறேன். இந்த ஒரு விஷயத்தில்  மட்டும் என் பேராசையைக் கட்டுப் படுத்த முடியாது....:)

அவர் பாடல்களை வரிசைப் படுத்துவது இயலாது.சட்டெனத் தோன்றியதில் எனக்குப் பிடித்த டாப் டென்...
1.மாலையில் யாரோ மனதோடு பேச...(சத்ரியன்)
2.முத்துமணி முத்துமணி (அதர்மம்)
3.தென்றல் வந்து தீண்டும்போது என்ன(அவதாரம்)
4.எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்(பட்டாக்கத்தி பைரவன்)
5.கண்ணன் ஒரு கைக்குழந்தை(பத்ரகாளி)
6.ஆகாசம் ஏனாதிதோ அனுராகம் ஆனாதிதே(தெலுங்கு-Nireekshana)-சங்கத்தில் பாடாத கவிதையின் சுந்தரத் தெலுங்கு வடிவம்.
7.ஆராரோ பாட்டுப் பாட நீயும் தாயில்லை(பொண்டாட்டி தேவை-(இது எனக்குத் தேவைதான் இப்போ :)   ))
8.கண்மணி நீ வரக் காத்திருந்தேன்(தென்றலே என்னைத் தொடு)
9.முத்தம்மா முத்து முத்து முத்தாளம்மா(தந்துவிட்டேன் என்னை)
10.விழியிலே மணி விழியிலே(நூறாவது நாள்)-ஜோதியல்லி(கீதா-கன்னடம்)....

   ஹ்ம்.... பட்டியல் தொடர்ந்துகிட்டே இருக்கு....
இந்த எல்லாப் பாடல்களையும் கேட்டுக்கிட்டே பண்ண படம் இந்த ஓவியம். பென்சிலில் வரைந்தது. ஆனாலும் ரப்பர் உபயோகிக்கவில்லை.கார்ட்ரிட்ஜ் பேப்பர்....