Tuesday, June 28, 2011

வீட்டுக்கு வந்த விருந்தாளிகள் பட்ட பாடு

       முதல் படத்தில் இருப்பவர் கணேஷ்...போன வார நாட்களில் ஒரு நாள் மாலை அவனுக்கு ஃபோன் செய்து ‘கணேஷ்...! கால்கிலோ கறி எடுத்துருக்கேன். தனியா சாப்பிட மனசு கேக்கலை. வர்றியா’ன்னு கேட்டேன். அவனும் நம்பி வந்துட்டான். அவன் பேசிக்கா கன்னடமொழி பேசுபவன். தமிழும் தெரியும்(எழுத்துக்கூட்டி வாசிக்கவும் செய்வான்). வெங்காயம், பூண்டினை அவனருகில் தள்ளி, டிவிடியை ஆன் செய்தேன். என்னிடம் இருப்பது எல்லாம் 80ஸ் ஹிட்ஸ் மூவிதான். கொஞ்சமே கொஞ்சம் புதிய படங்களும் இருந்தன. இருவரும் ரசனையும் இங்கு ஒத்துப் போகலாமென்றெண்ணி, ‘ராமன் தேடிய சீதை’யைத் திரையிட்டேன்.அவன் சுவாரஸ்யமாகப் பார்த்துக் கொண்டிருக்கையில் ஆயுதத்தை மெதுவாக எடுத்து வைத்தேன்.கொஞ்சம் அலட்சியமாகப் பார்த்துவிட்டுப் படம் பார்க்க ஆரம்பித்தான். நான் எனது வேலையை ஆரம்பித்தேன். 8B Steadler பென்சிலில் கேர்ட்ரிட்ஜ் பேப்பரில் சும்மா கிறுக்குவது கூடச் சுகம்தான். இப்போது சப்ஜெக்ட் வேறு கிடைத்துவிட்டது. பத்து நிமிடங்களுக்குள்ளாக ஓரளவு முடித்துவிட்டேன். அடுத்த ஐந்து நிமிடங்களில் அடர்த்தியான ஏரியாக்களையும் பூர்த்தி செய்திட, இப்படம் உருவாகிவிட்டது.சமீப காலமாக நான் செய்த போர்ட்ரெய்ட்களில் எனக்குப் பிடித்தது இது. கேரக்டரோடு, உருவ அமைப்பும் 90 சதம் பொருந்திப் போனதில் மகிழ்ச்சி...


     
   இதோ இந்தப் படத்துல இருக்கிறவரு மாரிமுத்து. நான் இந்தோரில் வேலை செய்கையில் பழக்கம். இவர் சென்னையில் வேலையிலிருக்கிறார். ஆறு மாத கால டெபுடேஷனுக்காக பெங்களூர் ஸ்டேஷன் வந்திறங்கினார். வெகு நாட்களாகக் கூப்பிட்டும் வராதவர், கடந்த சனியன்று என் ஸ்டூடியோவுக்கு (வேறொண்ணுமில்ல, என் வீடுதான் :)  ) வந்தார். வழக்கம்போல் விருந்து, அப்புறம் டிவிடி படம்(வீடியோ பாடல்கள்-ராஜா-ஜானகி ஹிட்ஸ்)...வழக்கம்போல் ஸ்கெட்ச்சிங்...
முதல் இரண்டு அட்டெம்டுகள் மோசம். இது பரவாயில்லை. ஆனாலும் அவர் போல் இல்லை. இருந்தாலும் எனக்குப் பிடித்திருக்கிறது...அடுத்தவாரம் வருவதாகச் சொல்லி இருக்கிறார். பார்க்கலாம். பெட்டராக வரவைக்கலாம்....

5 comments:

  1. அருமையான படங்கள். நேரில் பார்த்து வரைவது கடினமானது. ஒரே ஒரு "Constructuve Critisism " - மாரிமுத்துவின் காதையும் கனேஷ் காதை போல் தெளிவாக வரைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். உங்களை பர்ர்த்து எனக்கும் நிறைய வரைய வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது. கூடிய விரைவில் பகிர்கிறேன்.

    ReplyDelete
  2. @கோபிநாத்...
    நன்றி மாப்பி...!

    @சே.குமார்...
    நன்றி நண்பரே...!

    ReplyDelete
  3. @மீனாட்சி சுந்தரம்...
    நன்றி சார். நீங்கள் சொல்லியிருப்பது சரிதான். சரிபண்ணியிருக்கலாம்.
    உங்கள் படைப்புக்களையும் பார்க்க ஆவல்...!

    ReplyDelete