Saturday, June 18, 2011

திகிலான செங்கல்பட்டு பயணம் 120611

    கடந்த 12ந்தேதி நண்பர் ஒருவரின் திருமணத்திற்காக செங்கல்பட்டு சென்றிருந்தேன்.( என்னைக்குத்தான் என் திருமணத்திற்காகப் போகப் போறேனோ? :) )  சனி இரவு கிளம்பி ஞாயிறு காலை காஞ்சிபுரம் வழியாக செங்கல்பட்டு சென்றடைந்தேன். 8 முதல் 8.30 மணி நேரம்தான். திருப்பூட்டு முடிந்து இட்லி, செட் தோசை, பூரி, பொங்கல், பஞ்சாமிர்தம் மட்டும் சாப்பிட்டுவிட்டு உடனே பெங்களூர் திரும்பிவிட்டேன்...

    அந்தப் பயணத்திற்கான நினைவுக் கோடுகள் இதோ...
முதல் ஸ்கெட்ச் செங்கல்பட்டு அவுட்டோரில் ஒரு பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது வரைந்தது.

 இது வெல்லூர் பேருந்து நிலையத்தில் பேருந்தில் அமர்ந்திருந்தபோது சுற்றும் முற்றும் பார்த்து வரைந்தவை. அந்தக் குண்டு மனிதர் இண்டெரெஸ்டிங் சப்ஜெக்டாகத் தெரிந்தார். கறுப்புக் கண்ணாடி அணிந்திருந்த, வெள்ளைச் சேலை மூதாட்டி ஒருவர் ‘சித்திரம் பேசுதடி’ பாட்டியை நினைவூட்டினார்....வரைந்து முடிப்பதற்குள் பேருந்த் கிளம்பிவிட்டது (வேலூரில் சாப்பிட்ட முட்டைப் ப்ரியாணி அருமை. கத்தரிக்காய் தாளிச்சா பிரமாதம்)





இங்கு உள்ள படத்தின் மேற்பகுதி, எனது இருக்கையில் இருந்து பேருந்தின் மேற்புறம் பார்த்து வரைந்தது. பேருந்தில் கண்டக்டர் அமரும் ஒற்றை இருக்கைக்குப் பின்புறம் உள்ள இருக்கையில் சன்னலோரம் அமர்ந்திருந்தேன். வெல்லூரில் ஏறியவுடன் தூங்கிவிட்டேன். இரு மணி நேரங்களுக்குப் பிறகு முழித்தேன். பக்கத்தில் இருந்தவர், தோளில் அவர் கைகளால் இடித்துச் சைகை காட்டினார். அவர் காட்டிய இடம் ஓட்டுநரின் இருக்கை. அங்கு பார்த்தால் , வண்டியை ஓட்டியவாறு சற்றுக் கண்ணயர்ந்திருந்தார் ஓட்டுநர். எனது தூக்கமெல்லாம் பக் கென்று பறந்தோடிவிட்டது. எஞ்சினின் மேல் அமர்ந்திருந்த ஒரு பயணியிடம் , அவரைக் கவனிக்கச் சொல்லி கண்ணாட்டினேன். அவர் திரும்பிப் பார்க்கையில் , சற்றுச் சுதாரித்த ஓட்டுநர், ‘என்ன்?’ என்பதுபோல் தலையாட்டினார். போதும்டா சாமி என மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்...பிறகு எனக்கெப்படித் தூக்கம் வரும். எனது ஸ்கெட்ச் புக்கைக் கையிலெடுத்தேன். எனக்கு முன் மேற்புறம் ஓடாத டிவி பெட்டி இருந்தது. வரைய ஆரம்பித்தேன். அதனருகில் சிடி ப்ளேயர் வைக்கும் பெட்டியினுள்ளிருந்தது வாட்டர் பாட்டில்கள்தான்....:)
இப்படத்தின் கீழே உள்ள படத்தில் எனக்கு நேராக முன்புறம் உள்ள இடத்தை வரைந்துள்ளேன். இப்படத்திலுள்ள வரையும் கை என்னுடையதுதான்....:)))

2 comments:

  1. எல்லாம் நல்லா இருக்கு.
    அடுத்தக்கட்டமாக abstract ஓவியங்கள் முயற்ச்சியுங்கள்.

    ReplyDelete
  2. மிக்க நன்றி சார்...
    அப்ஸ்ட்ராக்ட் முயற்சிக்க வேண்டும். இன்னும் இதிலேயே நிறையப் படிகள் கடக்க வேண்டும் சார்.
    தங்கள் வாழ்த்துக்கள் ஊக்கமே...!

    ReplyDelete