Sunday, July 5, 2009

32 கேள்விகளும், அதற்கு மேற்பட்ட பதில்களும்…

    இந்தக் கேள்வி-பதில் தொடருக்கு அழைத்த நண்பர் இரா.வசந்தகுமாருக்கு நன்றி. அவரை அழைத்த ‘யோசிப்பவரு’க்கும் நன்றி.
1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
   ’தமிழ்ப்பறவை’- வலைப்பூ உருவாக்க முயன்ற போதே ஒரு பிடிவாதம்.. பெயரில் கட்டாயம் ‘தமிழ்’ இருக்க வேண்டுமென. ஒரு நிமிடத்துக்கும் குறைவான யோசனையில் தமிழுடன் சிறகாய் ஒட்டிக்கொண்டது பறவை. முன்பே வலைப்பூவின் தலைப்பு ‘வானம் வசப்படும்’ எனத்தீர்மானித்துவிட்டபடியால், பறவை என்னும் பெயர் இலக்கை அடையச் சரியானதாக இருக்குமென வைத்துக்கொண்டேன்.
  பிடிக்காமல் வைத்துக்கொள்ளமுடியுமா? ஆனால் இது பலருக்கும் பிடித்திருக்கிறது எனப் பின்னால் அறிந்ததில் ஒரு பெருமிதம்.

பரணி ராஜன்’: இது இயற்பெயர். காரணம் பரணி நட்சத்திரத்தில் பிறந்தேன்.அப்பொழுது ‘பரணி தரன்’ என்ற பெயர்தான் பொதுவாக வைப்பார்கள். என் தாத்தா, இவன் ராஜா மாதிரி (மாதிரிதான்...ராஜா இல்லை) இருக்க வேண்டுமென நினைத்து ‘பரணிராஜன்’ எனச்சூட்டிவிட்ட பெயர், இங்கு இந்திக்காரர்களின் வாயில் படாதபாடு படுகிறது.
என் பெயரின் ஆங்கில வடிவம் இன்னும் சிக்கலானது. அதைப் பிறிதொரு பதிவில் விளக்குகிறேன்.

  இப்பெயரும் எனக்குப் பிடிக்கும்.இந்தப் பெயர் ‘சுரேஷ்’,ரமேஷ்,சங்கர் போல்  ,வேறுபடுத்திக்காட்ட ஒன்றிரண்டு இனிஷியல்கள் வைப்பதைத் தவிர்க்கவைத்த சிக்கனமான பெயர்.
எப்பொழுது பெயரைப் பற்றிச் சிந்தித்தாலும் ,ஆறாம் வகுப்பு துணைப்பாடநூலில் படித்த ‘பெயரில் என்ன இருக்கிறது’ கதை நினைவோரம் நின்று விட்டுப் போகிறது.


2) கடைசியா அழுதது எப்போது?
  ஏதோ ஒரு தமிழ்ப்படம் பார்க்கும்போது, ஞாபகமில்லை இப்போது.
3) உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?
  நான் 5ந்தாம் வகுப்பு படிக்கும் காலத்திலிருந்து ,பிடிக்க வைக்க எவ்வளவு முயன்றும், என் கையெழுத்து எனக்குப் பிடிக்கவில்லை என்பது உண்மை. ஒவ்வொரு காலகட்டத்திலும் நன்றாக எழுதும் பலரின் கையெழுத்தைப் போல எழுத முயன்று வெற்றி பெற்றாலும், அது தற்காலிகமே.பின் ‘பழைய குருடி கதவைத் திறடி’ கதைதான்.(இதுக்கு அர்த்தம் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்...)
4) பிடித்த மதிய உணவு?
   பிரியாணி... இதில் பல வகை இருந்தாலும், மதுரைப் பக்கம் ‘முனியாண்டி விலாஸ்’களில் எண்ணெய் மிதக்கத் தயாராகும் பிரியாணி மற்றும் சால்னா வகை பிடிக்கும். இது தினசரி சாத்தியமில்லை என்பதால் முட்டையுடன் கூடிய ரசம் சாதம் மிகப் பிடிக்கும்.
5) நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா?
ஒரு வினாடி கூட யோசிக்காமல் வைத்துக்கொள்வேன்.பரணியை யாருக்காவது பிடிக்காமல் போகுமா என்ன? (மேனேஜர்களைத் தவிர)
6) கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?
  கடல்,அருவிக்குளியல் அதிகம் அனுபவப் பட்டதில்லை.வியர்வை சிந்திய தேகத்துடன் அறையில் குளிர்நீராடப் பிடிக்கும்.
கிராமத்து வயல்வெளியில் பம்ப்செட்டில் குளிக்க இன்னும் ஆசை.
7) ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?
   நாம் பேசினால் கேட்பாரா என்று... இல்லை அவர் பேசினால் நம்மால் கேட்க முடியுமா என்று...
8) உங்களிடம் உங்களுக்குப் பிடித்த விசயம் என்ன? பிடிக்காத விசயம் என்ன?
பிடித்த விஷயம்: எளிதில் நட்பு பாராட்டுதல்...
பிடிக்காத விஷயம்: சோம்பல்...
9)உங்கள் துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்?
  கேள்வி கேட்ட புண்ணியவான் குடும்பஸ்தன் போல.. அதான் எங்கள மாதிரி பேச்சுலர்ஸ்க்கு ஆப்சன் வைக்கலை.,.
வருங்கால துணைவிகிட்டன்னு கேள்வியை மாத்திக்கிட்டு பதில் சொல்றேன்...
  பிடிக்கப் போகும் விஷயம்: புன்னகை
  பிடிக்கப் போகாத விஷயம்: நச்சரிப்பு
10) இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?
     என் குடும்பத்தார்...
11) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?
   நீலம்+வெள்ளை (என்ன நிற ஆடைன்னு கேள்வி தெளிவா இருக்கப்போ ஏன் எல்லோரும், அவங்க போட்டிருக்கிற,போட நினைக்கிற உடையைப் பத்தில்லாம் கலர்,கலரா ரீல் விடுறாங்கன்னு தெரியலையே..?!. இருந்தும் எல்லைமீறல்களில் இருக்கும் சுகமே அலாதிதான்)
12) என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?
  பார்ப்பது: எல்.ஜி. மானிட்டர்..(யோவ் பதிவெழுதுறப்போ படம் பார்த்துட்டா போட முடியும். எல்லாரும் அவனவன் மானிட்டரைத்தான் பார்ப்பான்)
கேட்பது:
   ‘ஊரடங்கும் சாமத்தில்’ பாடலில் ஆரம்பித்து,’ராசாவே உன்னை விட மாட்டேன் நான்’ எனத் தொடர்ந்து கொண்டிருக்கிறது,அநேகமாக பதிவு முடிக்கும் வேளையில் ‘தென்றல் வந்து என்னைத் தொட’ ஆரம்பித்திருக்கலாம்.
13) வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?
கறுப்பு
14) பிடித்த மணம்?
மல்லிகை
15) நீங்கள் அழைக்கப்போகும் பதிவர்களிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்?
மகேஷ்:  ‘ரசிகன்’ என்னும் வலைப்பூவில் சொல்ல வேண்டிய விஷயத்தைச் சுருக்கமாக ,அழகாகச் சொல்லி வருகிறார்.எனது கல்லூரி ஜூனியர்.தம்பி.மற்றபடி எனக்கும் ரசிகன்.
கபீரன்பன்: இவரின் ஓவியங்கள் எனக்குப் பிடிக்கும். எனது ஓவியங்களைப் பதிவு செய்யத் தூண்டிய பதிவுகளில் இவருடையதும் ஒன்றெனலாம்.இவருக்கும் நான் ஏகலைவன் தான்.
தர்ஷினி: ஒரு நாளைக்கு இவருக்கு 48 மணி நேரம்ன்னு நினைக்கிறேன்.ஏன்னா அவ்வளவு பொறுமையான, நேரமெடுக்கும் கை வினைப் பொருள்களைச் செய்து வருகிறார். இவரின் வலைப்பூவில் இதுபோன்ற தொடர்கள் எழுதமாட்டார் எனத் தெரியும். இருந்து இன்விடேஷனை நீட்டிவிட்டேன்.எப்படியாவது நிறைவேற்றிவிடுவாரென எண்ணுகிறேன்.
கயல்விழிநடனம்: இவரின் வலைப்பதிவுகள் தரமாக இருக்குமென்பதற்கு ஒரே சாட்சி இவர் வலைப்பூவின் தலைப்புதான்.சிறுசிறு விஷயத்தையும் நகைச்சுவையோடு சுவையாகச் சொல்கிறார்.பொதுவாக மகளிர் பதிவுகளுக்குச் செல்கையில் எடுத்துச் செல்ல வேண்டிய கர்ச்சீஃபுக்கு இவர் பதிவில் வேலை இருக்காது.
16)உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
இரா.வசந்தகுமார்---காலப்பயணியின் கதை ஓட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாது. இவரின் 95 சதவீதப் பதிவுகள் பிடிக்கும். குறிப்பிட்டுச் சொல்ல இயலவில்லை.ஒரு விஷயத்தை எப்படி அழகாகப் பதிவில் பண்ணவேண்டுமென்பதற்கு இவர் எனக்கு நிகழ்த்திய லைவ் டெமான்ஸ்ட்ரேஷன் இப்பதிவு. இது எனக்குக் கடந்த வாரத்தில் நேர்ந்த அனுபவம். அதை இவரிடம் கால் மணிநேரம் சொல்லி இருப்பேன். அதைக்கூட அழகான கிசுகிசு டைப் கிச்சுகிச்சு பதிவாக்கி இருக்கிறார்...

  
இன்னொரு பதிவு:இந்த மொக்கையான கேள்வி-பதில் தொடரைக் கூட எவ்வளவு சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார் பாருங்கள்…

17) பிடித்த விளையாட்டு?
  சதுரங்கம்..
(பிடிக்காத விளையாட்டு: வாழ்க்கை)
18) கண்ணாடி அணிபவரா?
ஆம்..(ரெஃப்: ப்ரொஃபைல் ஃபோட்டோ)
19) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?
எல்லா மாதிரியாகவும். அதிகம் விருப்பம் காதல்,காமெடி திரைப்படங்கள்(காதலே காமெடி என யாருப்பா சொல்றது..?!)
20) கடைசியாகப் பார்த்த படம்?
‘வினோத யாத்ரா’- இளையராஜாவுக்காகப் பார்த்தது. இன்னும் இளையராஜாவை உயிர்ப்போடு உபயோகப் படுத்தும் இயக்குனர்களில் ‘சத்யன் அந்திக்காடு’ம் ஒருவர்.
21) பிடித்த பருவ காலம் எது?
குழந்தைப் பருவ காலம்....
மழைக்காலம்...
22) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?
பழைய விகடன்கள், கோபி கிருஷ்ணனின் ‘இடாகினிப்பேய்களும்’,எப்போது மனது சஞ்சலப் பட்டாலும் எஸ்.ராமகிருஷ்ணனின் ‘துணையெழுத்து’...
23) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?
   அடிக்கடி மாற்றுவது எனக்குப் பிடிக்காது.கொஞ்சம் செண்டிமெண்ட்டும் கூட... எனது டெஸ்க்டாப் படம் இப்பதிவிலிருக்கும் படம்தான்
24) பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
பிடித்த சத்தம்:
      இசை
பிடிக்காத சத்தம் : இரைச்சல்
25) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?
1500 கி.மீ... கடந்ததில் வந்தது இப்போதிருக்கும் இந்தூர்..
26) உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?
இருக்கிறதெனெவே நினைக்கிறேன் இருந்தும் சரியாக வெளிப்படுத்தியதில்லை.
27) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?
பல விஷயங்கள் இருக்கின்றன. இருந்தும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில், இந்திய அரசியல்.
28) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
     உள்ளே மட்டும் என இல்லாமல் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சாத்தான் Mr.சோம்பலார்தான்.
இந்தக் கேள்வி,பதில் தொடருக்கான அழைப்பு வந்து பத்து நாட்களாகியும், நேற்று வசந்த் அலைபேசியில் மிரட்டல் வைத்தபின் தான் முடிக்க முடிந்தது.
29) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?
சென்னை
30) எப்படி இருக்கணும்னு ஆசை?
ப்ரொஃபஷனல் ஆர்ட்டிஸ்டாக ஆசை
31) மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?
இப்போ நான் விரும்பிச் செய்யுற எல்லாக்  காரியங்களிலும் மனைவி இல்லை. சொல்லப் போனா மனைவியே இல்லை.
32) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க.
zero shirt விளம்பரவாசகம் ஒண்ணு பார்த்தது எனக்குப் பிடித்திருந்தது. ஏன்னா அது வாழ்க்கைக்கு ஃப்ளெக்ஸிபிளா பல இடங்களில் பொருந்துகிறது.
”Take Life as it comes"

29 comments:

  1. //கேள்வி கேட்ட புண்ணியவான் குடும்பஸ்தன் போல.. அதான் எங்கள மாதிரி பேச்சுலர்ஸ்க்கு ஆப்சன் வைக்கலை.,.
    வருங்கால துணைவிகிட்டன்னு கேள்வியை மாத்திக்கிட்டு பதில் சொல்றேன்...
    பிடிக்கப் போகும் விஷயம்: புன்னகை
    பிடிக்கப் போகாத விஷயம்: நச்சரிப்பு///

    உங்களை மாதிரி பேச்சிலர்ஸ் ஏற்கனவே அரை பாதி கரெக்ட் செஞ்சிருக்க ஆப்ஷ்ன் நிறையாஆஆஆஆ இருக்குன்னு ஒரு வேளை இப்புடி கேட்டிருக்கலாமோ????

    அரையாகாமல் நிற்கும் ஆயில்யன் :))

    ReplyDelete
  2. நல்லா இருக்கு 32 :)

    லைப் பத்தின டீ ஷர்ட் வாசகம் சூப்பர்! :)

    ReplyDelete
  3. நான் வந்துட்டேன்!!!

    \\யோவ் பதிவெழுதுறப்போ படம் பார்த்துட்டா போட முடியும். எல்லாரும் அவனவன் மானிட்டரைத்தான் பார்ப்பான்\\

    பின்ன என்ன அடுத்தவன் மானிட்டரையா பாக்க முடியும்?? என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு, ராஸ்கல்..

    \\”Take Life as it comes"\\.. Y dont u bend it like Becham??? புரியுதா??

    அருமையான பதிவு.. "சிறைக்குள் சிக்கிய சிங்கம்" பதிவு எப்போது?? கவிதைகளையும் எதிர் பார்க்கிறேன்..

    ReplyDelete
  4. // கயல்விழிநடனம்: இவரின் வலைப்பதிவுகள் தரமாக இருக்குமென்பதற்கு ஒரே சாட்சி இவர் வலைப்பூவின் தலைப்புதான். //

    நக்கலு ?

    // கேள்வி கேட்ட புண்ணியவான் குடும்பஸ்தன் போல.. அதான் எங்கள மாதிரி பேச்சுலர்ஸ்க்கு ஆப்சன் வைக்கலை.,. //

    பேச்சிலரா? வேற மாதிரி கேள்விப்பட்டேனே?

    ReplyDelete
  5. நல்லா இருக்கு.வலைப்பெயர் பற்றி எழுதியுள்ளீர்கள். இயற்பெயர் பற்றிசொல்ல வேண்டும்.

    கடைசி பதிலும் நல்லா இருக்கு.

    ReplyDelete
  6. nice ans's....btw, ma.se.'s interview is here ::

    http://www.tamilonline.com/thendral/MoreContent.aspx?id=103&cid=4&aid=5663

    ReplyDelete
  7. nice answers.come and see www.inippu.blogspot.com

    ReplyDelete
  8. @ஆயில்யன்....
    அரையாகாமல் நிற்கும் ஆயில்யன் சார், நான் கால்வாசிகூட தாண்டலை...
    :-((
    வந்திருந்து வாழ்த்தியதற்கு நன்றி ஷ்ரேயா கோஷல் நற்பணிமன்றத் தலைவரே...
    இவண்...
    ஷ்.கோ.ந.ப.மன்றம்,
    இந்தூர் கிளை...

    @அரவிந்த்..
    ஹலோ அரவிந்த்... ரொம்ப நாளா ஆளையே காணோமே...
    வந்ததற்கு நன்றி.
    //\\”Take Life as it comes"\\.. Y dont u bend it like Becham??? புரியுதா??
    //
    சத்தியமாப் புரியலை. விளக்கம் தேவை.
    ‘சிறைக்குள் சிக்கிய சிங்கம்’ பதிவுக்கான பூர்வாங்க வேலைகள் ஆரம்பித்துவிட்டன. விரைவில் வரும்.
    கவிதைகளா...? இப்பத்தான் கொஞ்சம்,கொஞ்சம் நண்பர்கள் பதிவுக்கு வந்துட்டுப் போறாங்க அது பிடிக்கலையா...?
    அதுவும் ஒரு மூலையில இருக்கு. ‘டெர்ரர் எண்ட்ரி’ கூடிய சீக்கிரம்...

    @மகேஷ்...
    நக்கலு இல்லை மகேஷ்... உண்மையச் சொன்னேன்.:-))
    //பேச்சிலரா? வேற மாதிரி கேள்விப்பட்டேனே?//
    அடப்பாவி போற போக்குல கொளுத்திப் போட்டுப் போறியே.. இது நியாயமா...? வலைப்பூன்னாலே என்னன்னு தெரியாம. தலைப்பூவுல மட்டும் கவனம் செலுத்துற பொண்ணாப் பார்க்கணும் இனிமே...

    அதெல்லாம் சரி... சீக்கிரம் ‘கேள்வி-பதில்’ பதிவைப் போடு...

    @ரவிஷங்கர்...
    நன்றி ரவிஷங்கர் சார். இயற்பெயர் பற்றிய உங்கள் கேள்விக்கு, இப்போது பதிவில் காரணம் சேர்த்துவிட்டேன். முதல் கேள்விக்கான பதிலை இப்போது படித்துப் பார்க்கவும்.கடைசி பதிலுக்கான கிரெடிட், ‘zero shirt'அட்வெர்டைசருக்குத்தான் போய்ச் சேரணும்...

    @இரா. வசந்தகுமார்...
    வாங்க வசந்த்.. கடமையை ஒருவழியா நிறைவேற்றிட்டேன்.வாய்ப்புக்கு நன்றி.
    வீடியோ பார்க்க இன்னும் நேரம் கிடைக்கவில்லை. இன்றிரவு பார்த்துவிடுகிறேன். நாளை கதைக்கலாம்.

    @ராஜதிருமகன்...
    இனிப்போட வந்திருக்கீங்க. அவசியம் வந்து பார்க்கிறேன். வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  9. உங்களை பற்றி அறிந்ததில் மகிழ்ச்சி

    வாங்க என் பக்கத்துக்கு

    ReplyDelete
  10. அன்பான அழைப்புக்கு நன்றி தமிழ்பறவை (எ) பரணிராஜன் :)

    ஏற்கனவே ஒரு அழைப்பு வந்து கேள்விகளுக்கு பதிலும் சொல்லியாச்சு.

    ///‘பழைய குருடி கதவைத் திறடி’ கதைதான்.(இதுக்கு அர்த்தம்... ///

    நானும் இதை பலமுறை யோசித்ததுண்டு. இது ஏதோ மருவி புழங்கும் சொற்றொடராகத் தோன்றுகிறது.

    நல்ல சுவாரஸ்யமான பதில்கள்.வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. ”Take Life as it comes" - அழகு...நிஜம்...

    //கயல்விழிநடனம்: இவரின் வலைப்பதிவுகள் தரமாக இருக்குமென்பதற்கு ஒரே சாட்சி இவர் வலைப்பூவின் தலைப்புதான் - இதுக்கு பேர் தான் cycle gap ல bus..(hmm...no..no..train) ஓட்டுறதா???

    கடைசில நானுமா???? :O

    ReplyDelete
  12. சகா..

    நிறைய விஷயங்கள் நமக்கு ஒரே மாதிரி இருக்கு ;))

    பெயர் - தாத்தாவச்சது ;)

    டெஸ்க்டாப் படம், போன நிறம், கண்ணாடி...இப்படி

    இவை எல்லாம் விட நம்ம இசைதெய்வம் ராஜா ;))

    கலக்கல் சகா ;)

    ReplyDelete
  13. // வலைப்பூன்னாலே என்னன்னு தெரியாம. தலைப்பூவுல மட்டும் கவனம் செலுத்துற பொண்ணாப் பார்க்கணும் இனிமே... //

    நாங்க காட்டிக்கொடுத்துருவோம்ல!

    ReplyDelete
  14. @ஸ்டார்ஜன்...
    முதல் வருகைக்கு நன்றி.. விரைவில் உங்கள் பக்கம் வருகிறேன்.

    @கபீரன்பன்...
    வாங்க சார்... நான் உங்களின் ’என் சித்திரங்கள்’ வலைப்பூவை மட்டும் ஃபாலோ செய்வதால், அந்த வலைப்பூவில் நீங்கள் பதிவிட்டது தெரியாது. வந்து படிக்கிறேன்.வருகைக்கு நன்றி சார்...

    @கயல்விழி நடனம்...
    ஒரு ஆட்டோமொபைல் என்சினியர் பஸ் கூட ஓட்டாட்டி எப்படி..?
    பதிவை எதிர்பார்க்கிறேன்...

    @கோபிநாத்...
    வாங்க சகா...
    great people think alike...
    இசையால் இணைந்தோம்..
    இன்னும் உங்கள் பதில்களைப் படிக்கவில்லை. வந்தேன் ஒரு முறை, 12 வது கேள்விக்கான இரண்டாவது பதிலை மட்டும் பார்த்துச்சென்று விட்டேன். இனியொருமுறை வந்து முழுதும் படிக்கிறேன்...

    @மகேஷ்...
    தம்ப்ப்ப்ரீ...இந்தூர்ல இருக்கிற தமிழ் தெரியாத பொண்ணாப் பார்க்கவேண்டியதுதான்...

    ReplyDelete
  15. உங்கள் பதில்கள் அருமை.....

    ReplyDelete
  16. தெளிவான அழகான பதில்கள்.

    ReplyDelete
  17. பரணி, அழைத்தமைக்கு மிக்க நன்றி.
    என்னங்க ஒரேடியா புகழ்ந்து தள்ளிட்டு இருக்கீங்க. நான் சரியான சோம்பேறி, நிஜமாவே நேரத்தை சரியான அளவில் பயன்படுத்தி இருந்தால் பெரிய ஆர்டிஸ்ட்டா வந்திருக்கலாம். இதுக்குமேலயாவது தொடர்ந்து வரைய பழகனும்.
    ‘பெயரில் என்ன இருக்கிறது’கதை படித்த மாதிரிதான் இருக்கிறது.. உங்களுக்கு ஞாபக சக்தி ரொம்ப அதிகம் போலிருக்கு. எனக்கு தலைப்பு தவிர எதுவும் ஞாபகம் இல்லை.

    ReplyDelete
  18. //ஒரு ஆட்டோமொபைல் என்சினியர் பஸ் கூட ஓட்டாட்டி எப்படி..?
    பதிவை எதிர்பார்க்கிறேன்...

    எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட்டது....
    எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட்டது.... உங்கள் அளவிற்கு இல்லை என்றாலும் வழக்கம் போல் கயல்விழியின் Styleலில்...


    சில கேள்விகள்.... http://vaan-nathi.blogspot.com/2009/07/blog-post.html

    ReplyDelete
  19. ஐயோ கடவுளே....
    "நிலாவும் அம்மாவும்"என்னைத் தொடக்கிவிட்ட இந்த 32 கேள்விகள் இன்னும் இப்படி அலைமோதி அத்தனை பேரின் குட்டுக்களையும் உடைச்சு வருதா !!!!சரி நடக்கட்டும் நடக்கட்டும்.

    தமிழ்ப்பறவை அண்ணா,நான் தவறவிட்ட உங்களின் பதிவுகள் பார்த்தேன்.குட்டிக்கவிதையும் ஓவியமும் நிறையப் பிடிச்சிருக்கு.

    ReplyDelete
  20. @சந்ரு...
    முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி...

    @விக்னேஸ்வரி...
    முதல் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி...

    @தர்ஷினி...
    உண்மையத்தான் சொன்னேன்.இனி இன்னும் அதிக நேரம் செலவழித்து, ஓவியங்களை உருவாக்க எனது வாழ்த்துக்கள்..
    கேள்வி-பதில் தொடர் பதிவு போட்டிருங்க கொஞ்சம் அதுக்கும் நேரம் ஒதுக்கி...

    @கயல்விழி நடனம்...
    நன்றி கயல் பதிவிட்டமைக்கு.. வருகிறேன் கயல்விழியின் style பதில்கள் பார்க்க...

    @ஹேமா...
    வாங்க ஹேமா... அந்த புண்ணியவான்/வதி ‘நிலாவும், அம்மாவும்’ தானா..? சரி நானே நேரடியாக் கேட்டுக்கிறேன்.. இங்க எல்லாரும் கொலைவெறியில் சுத்திட்டுருக்கதாச் சொல்லுங்க...
    எனது பழைய பதிவுகளைப் பார்வையிட்டமைக்கு(ரசித்தமைக்கு) நன்றி...

    ReplyDelete
  21. பிரியாணி... இதில் பல வகை இருந்தாலும், மதுரைப் பக்கம் ‘முனியாண்டி விலாஸ்’களில் எண்ணெய் மிதக்கத் தயாராகும் பிரியாணி மற்றும் சால்னா வகை பிடிக்கும். இது தினசரி சாத்தியமில்லை என்பதால் முட்டையுடன் கூடிய ரசம் சாதம் மிகப் பிடிக்கும்

    நன்கு ரசித்து புசிப்பீர்கள் போலும்...

    ReplyDelete
  22. இங்கு இந்திக்காரர்களின் வாயில் படாதபாடு படுகிறது.
    என் பெயரின் ஆங்கில வடிவம் இன்னும் சிக்கலானது. அதைப் பிறிதொரு பதிவில் விளக்குகிறேன்.

    ‘பெயரில் என்ன இருக்கிறது’ கதை நினைவோரம் நின்று விட்டுப் போகிறது.


    கண்டிப்பாக

    ReplyDelete
  23. ஒரு வினாடி கூட யோசிக்காமல் வைத்துக்கொள்வேன்.பரணியை யாருக்காவது பிடிக்காமல் போகுமா என்ன? (மேனேஜர்களைத் தவிர)

    ஹ ஹ ஹ

    ReplyDelete
  24. வருகைக்கு நன்றி சக்தி...ஒவ்வொரு வரியையும் ரசிக்கிறீர்கள் போல...:-)

    ReplyDelete
  25. அனைத்து பதில்களும்
    மிக அருமை நண்பரே ..
    மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கிறேன் ..
    விட்டுப்போன பதிவுகளையும் படித்து விட்டு வருகிறேன் ...

    அன்புடன்
    விஷ்ணு ...

    ReplyDelete
  26. மீண்டும் வருகைக்கும், வாழ்த்தியதற்கும் நன்றி நண்பர் விஷ்ணு அவர்களே...

    ReplyDelete
  27. வணக்கம் தமிழ்ப்பறவை
    www.susenthilkumaran.blogspot.com
    www.kavinkavi.blogspot.com
    இதுவும் என்னுடைய தளங்கள்தான் பார்த்து உங்க கருத்துகளைச் சொல்லுங்க‌

    ReplyDelete
  28. கண்டிப்பாக வருகிறேன் இராஜதிருமகன் சார்...

    ReplyDelete